புதியயுகம்
Search This Blog
Welcome
இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!
புதிய யுகம் உங்கள் வாக்குகளையும் பின்னூட்டல்களையும் எதிர்பார்க்கின்றது
Labels
- அரசியல் (2)
- ஆங்கில செய்தி (1)
- உலக சினிமா (3)
- கணினி வளாகம் (3)
- சமுதாயம் (4)
- தமிழ் சினிமா (1)
- தெனலிராமன் சிறுகதைகள் (4)
- தொழில்னுட்பம் (3)
- நகைச்சுவை (1)
- படித்ததில் பிடித்தது (3)
- பாடல் வரிகள் (2)
Today's Referrer
தமிழ் அகராதிகள்
Blog Archive
உறுப்பினர்கள்
வளர்ச்சிக்காக..
Tamil Radios by Puthiyayukam
Tamil Radios 50+ Online Radio
CHOOSE YOUR SONGS AND RADIO
Enthiran ~ (2010) ACD Rip - 320 Kbps - Extrem Quality - First On Puthiyayukam
Banner: Sun Pictures
Cast: Rajinikanth & Aishwarya Rai
Direction: S. Shankar
Production: Kalanidhi Maran
Music: A.R. Rahman
Lyricis: Vairamuthu, Kaarki & P. Vijay
Released Year: Jul : 2010
Click this bar to view the full image.
Click this bar to view the full image.
Ripper Information
Source : CD
Ripper : S.Bharathi
Ripper Mod : EAC (Secure Mode) / Lame 3.99 & Asus CD-S520
Lame : 3.99
Version : MPEG 1 Layer III
Encoding Bitrate : Extreame,VBR(AVG.Bitrate : 276Kps)
Sample Size : 16 Bit
Channels : II Stereo / 44100 hz
Tags Contains : ID3 V2.3 (ANSI) & DV3v1.0
Movie Track List
01. Puthiya Manidha...
Singers : S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman
02. Kadal Anukkal ...
Singers : Vijay Prakash, Shreya Ghoshal
03. Irumbile Oru Idhaiyam....
Singers : A. R. Rahman, Kash'n'Krissy
04. Chitti Dance Showcase...
Singers : Pradeep Vijay, Pravin Mani, Yogi B
05. Arima Arima....
Singers : Hariharan, Sadhana Sargam
06. Kilimanjaro...
Singers : Javed Ali, Chinmayi
07. Boom Boom Robo Da...
Singers : Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah
Download This Songs From megaupload: Megaupload
Download this songs From Torrent...
Download Torrent Enthiran
Download Torrent from Google Docs
Download Utorrent to Download these torrents Link
...
யாழ்ப்பாண மரபு
யாழ்ப்பாணத்துப் பெயர்களைப் பார்க்கும்போது, அவற்றைச் சமய அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கலாம். இவை:
இந்துப் பெயர்கள்
கிறிஸ்தவப் பெயர்கள்
முஸ்லிம் பெயர்கள்
இப்பிரிவுகளைச் சார்ந்த பெயர்கள் அவற்றுக்குரிய தனித்துவமான இயல்புகளைக் கொண்டு அமைந்துள்ளன.
இந்துக்கள்
ஐரோப்பியர் காலத் தேவைகளுக்கு ஏற்ப, ஒற்றைப் பெயரிடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, யாழ்ப்பாணத் தமிழர் மரபு, தமிழக வழக்கிலிருந்து ஓரளவு வேறுபட்டு அமைந்தது எனலாம். வேறுபடுகின்ற அம்சங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை பின்வருமாறு:
ஊர்ப்பெயர்கள் மக்கட் பெயர்களின் பகுதிகளாக அமையாமை.
பிராமணர்களையும், பிற்காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய செட்டிமார்கள் போன்ற சில வகுப்பினரையும் தவிர ஏனையோர் சாதியை அடையாளப்படுத்தும் ஒட்டுகளைகளைத் தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இல்லாதிருந்தமை.
மிகப் பெரும்பான்மையான யாழ்ப்பாண இந்துக்களின் பெயர்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்ட பெயர், மற்றது அவரது தந்தையார் பெயர். ஆண்களைப் பொறுத்தவரை, பெயர்கள் பின்வரும் வடிவத்தில் அமைகின்றன.
(தந்தை பெயர்) (சொந்தப் பெயர்)
பொன்னம்பலம் என்பவருடைய மகன் கணேசன் எனில், கணேசனுடைய பெயர் பின்வரும் மூன்று வழிகளில் எழுதப்படுவதுண்டு.
பொன்னம்பலம் கணேசன்
பொ. கணேசன்
பொன். கணேசன்
முதலாவது, கணேசனுடைய முழுப்பெயர் எனப்படுகின்றது. முழுப்பெயர் தேவையில்லாதபோது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சேர்த்து எழுதுவது வழக்கம். இதை இரண்டாவது பெயர் காட்டுகின்றது. தந்தையின் பெயரிலிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களைச் சேர்த்து, மூன்றாவது எடுத்துக்காட்டில் காணப்படுவது போல் எழுதுவதும் உண்டு. ஆனால், மிகவும் குறைந்த அளவினரே இவ்வாறு எழுதுகிறார்கள். சிலர் தங்கள் பெயரில் மூன்றாவது கூறாகப் பாட்டன் பெயரையும் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. எடுத்துக்காட்டாகக் கணேசனின் பாட்டன் சின்னத்தம்பி எனின், கணேசனின் முழுப்பெயர் பின்வருமாறு எழுதப்படும்.
சின்னத்தம்பி பொன்னம்பலம் கணேசன்
இதைச் சுருக்கமாகத் தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது கீழ்க்காணுமாறு அமையும்.
சி. பொ. கணேசன்
பெயர்கள், பாட்டன், தந்தை, மகன் என மரபுவழியின் இறங்கு வரிசையில் எழுதப் படுகின்றன. இது ஒரு பரவலாகக் கைக்கொள்ளப்படும் மரபு எனக் கொள்வதற்கில்லை.
பெண்களுடைய பெயர்களில் சிறிது வேறுபாடு உண்டு. இங்கே தந்தையின் பெயரைத் தங்களுடைய பெயருக்கு முன் எழுதாமல், அதற்குப் பின்னர் எழுதுவது வழக்கம். இது பின்வருமாறு அமையும்.
(சொந்தப் பெயர்) (தந்தை பெயர்)
ஆனாலும், தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது யாழ்ப்பாணத்தில் பொதுவாகப் பெண்களும் தலைப்பு எழுத்தை ஆண்கள் எழுதுவது போல் தங்கள் பெயருக்கு முன்னால் இட்டே எழுதுவது வழக்கம். இவற்றைவிடத் தங்கள் சொந்தப் பெயர்களின் முதலெழுத்துடன் தந்தையின் பெயரைச் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. மேலே கூறப்பட்ட வழிகளுக்கு எடுத்துக்காட்டாகப் பொன்னம்பலத்தின் மகள் சுந்தரியின் பெயர் எழுதப்படும் விதங்களைக் கீழே காண்க.
சுந்தரி பொன்னம்பலம்
பொ. சுந்தரி
சு. பொன்னம்பலம்
1) கல்யாணிக்கு, கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாண சுந்தரம் கல்யாணிக்கு கல்யாணம் என்ற மாப்பிளைய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினார். கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணம் வேணாம்னு சொல்ல, கல்யாணி கல்யாணத்தைப் புடிக்காமத்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றலோன்னு கல்யாணி கல்யாணத்துக்கு கல்யாணம் வேணாம்னு கல்யாணராமன் என்ற மாப்பிளையை பார்க்க, கல்யாணி கல்யாணமே வேணாம்னு கல்யாணராமன்ட்ட சொல்ல, கல்யாணி அப்பா கல்யாணி கல்யாணத்த எப்படி நடத்துவாரு? யோசிங்க!.....
2) நாஸா ஐஸ்’ம், தண்ணீரும் நிலாவுல கண்டுப் பிடித்துருக்காங்க, நாம சரக்கும், முறுக்கும் கொண்டு போனா மட்டும் போதும்!!
3) சும்மா இருக்குறவன் சும்மா இல்லாம சும்மா இருக்குறவனுக்கு சும்மா சும்மா மெசேஜ் அனுப்பி வச்சா சும்மா இருக்குறவுங்க சும்மா சும்மா மெசேஜ் அனுப்புறவங்கள சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்குறவங்களுக்கு இந்த மெசேஜ்’ஐ சும்மா போர்வேர்டு பண்ணுங்க. இல்லன்னா சும்மா இருங்க. -----
BY
சும்மா இருக்க முடியாம சும்மா இருப்பவர்களுக்கு சும்மா மெசேஜ் அனுப்புவோர் சங்கம்.
4) 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர்(?) என்பது!!
5) வாழ்க்கை என்பது
மொட்டுக்கள் நிரம்பிய
மலர்களின் தோட்டம்!
நீ சிரிக்கும்போது
மட்டுமே அதில்
பூக்கள் பூக்கிறது!!
6) பல நூறு வருடம் ஆகும் ஒரு வைரம் உருவாக!
அப்படி இருக்க நீ மட்டும் எப்படி பத்து மாதத்தில்?
?
?
?
?
?
?
ஹலோ! ஹலோ! கண்ட்ரோல் யூவர்செல்ப்!!
ப்ரீ மெசேஜ்’னா இப்படி காமெடியா வரத்தான் செய்யும்.....
7) அப்பா: ஏன்டா நேத்து குடிச்சுட்டு விழுந்து கிடந்த?
மகன்: எல்லாம் கெட்ட சகவாசம்தான்பா! 6 பீர் 6 பேர். அதுல 5 பேர் குடிக்கல! இந்த மாதிரி ப்ரண்ட்ஸ் இருந்தா இப்படித்தான் ஆகும்பா!!
8) ஒரு அழகான கவிதை:-
காற்றே!
நீயும் எங்களைப்
போலத்தானா?
படிக்காமலே
பக்கத்தைப்
புரட்டுகிறாயே?!?
--- கடைசி பெஞ்ச் ஸ்டுடன்ட்ஸ் சங்கம்...
9) குங்குமம் இந்த வாரம்....
?
?
?
?
?
?
?
?
சந்தனம் அடுத்த வாரம்.
விபூதி அதுக்கு அடுத்த வாரம்.
---- கோவில் வாசலில் உருண்டு புரண்டு யோசிப்போர் சங்கம்.
10) LKG Boy- 1: மாப்ள! எக்ஸாம்’ல எதுவும் தெரியாததால எதுவும் எழுதாம வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்டா!
LKG Boy – 2: நானும்தாண்டா... வெறும் பேப்பரைக் கொடுத்தேன்!
LKG Boy – 1: அட முட்டாப் பயலே! ஏன்டா அப்டி பண்ணுன? டீச்சர் நம்மள காப்பி அடிச்சதா நினைச்சுட மாட்டாங்க?
11) இனிப்பான முத்தம்? --- தலையில்.
அன்பான முத்தம்? --- cheeks.
ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில்.
சூடான முத்தம்?
?
?
?
பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும்.
12) தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்...
உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு...
நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே
I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா?
ஏதும் புக் பேரா?
---- பச்சபுள்ள சங்கம்....
13) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!
14) நம்ம அய்யாசாமி ஏர்போர்ட்க்கு போன் செய்கிறார்....
“ஏங்க மும்பை டு லண்டன் எவ்வளவு நேரம் ஆகும்?”
ரிசப்னிஸ்டு: ப்ளீஸ் ஒன் செகண்ட் சார்...
அய்யாசாமி: அட ங்கொக்க மக்க என்னா ஸ்பீடு....
15) நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ
எப்ப உணர்ந்த?
நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்.....
16) அழகான பெண்களுக்கு 4 விஷயங்கள் பிடிக்கும்...
1. செல்போன்
2. ஸ்கூட்டி
3. பணம்
4. “மோகன்”
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்...
அதனால நீங்க கடுப்பாகதீங்க.......
17) அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது?
பெண்: நான் செல்லம்மா பேசுறேன்...
அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்?
யாருன்னு சொல்லுமா!
பெண்: ?!?
18) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?
அம்மா: ?!?
19) ஹாய்! ஏன் நியூ நம்பர் 94xxxxxxx5.... please save it....
?
?
?
?
?
?
?
?
அப்புறம் ஒரு விஷயம்... என்னோட பழைய நம்பரும் அதுதான்...
என்ன பண்றது? லொள்ளு என் கூட பிறந்தது... மெசேஜ் வேற ப்ரீயா... அதனாலதான்...
20) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்

பாயும் புலி பண்டாரவன்னியன் என்பது வெள்ளையர்களுக்கெதிராக கடைசி வரை தைரியமாக நின்று வன்னி நிலபரப்பில் அரசாண்ட ஒரு குறு நிலமன்னின் வீர காவியம் ஆகும். இது கலைஞர் அவர்களால் எழுதப்பட்டது. தென்மோடி கூத்து வடிவத்தில ஈழத்து அண்ணாவிகளினால் வடிவு அமைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. பண்டாரவன்னியன் கதை.
பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.
அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னிநிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.
ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனூப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.
இது ஒரு புறமிருக்க.. வன்னிநிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டி பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டரா வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்கவேண்டாமென்ற ஆலோசனையையும்மீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வனனியன்.
இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது..
இந்த கூத்தில் ஓரிரு சம்பவங்களை பார்க்கலாம்...
தம்பி பெரியமைனர்--- "அண்ணா நமது வன்னி நாட்டைக்கைப்பற்று நோக்கம் அந்த வெள்ளைக்கார கும்பலுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நமது சகோதரர்களாகிய சிங்களவர் வாழும் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற பெரும்படைகளை அநுப்பியிருக்கிறார்கள். இந்தச்சந்தர்ப்பத்தில் சிங்களமக்களுக்கு துணையாகவும் ஆங்கிலேயருக்கு எதிராகவும் வீறு கொண்டு சீறியெழும் எங்கள் படைகளை அனுப்பிவைத்தால் நன்மையாக இருக்கும்."
பண்டரா வன்னியன்: "ஆகா நல்லது தம்பி கைலாயா உமது யோசனை என் தம்பி கைலாய வன்னியன்."
"அண்ணா கண்டிக்கு நமது படைகளை அநுப்புவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சிங்களமக்களை காப்பற்ற உதவி புரிந்ததாக இருக்கும். அடுத்தது இந்த சந்தர்பத்தில் நமது படை பலத்தை வெள்ளையருக்கு காட்டகூடியதாயிருக்கும். சுணங்கமால் நமது படைகளை கண்டிக்கு அனுப்புதல் நலம்."
பண்டாரவன்னியன்: "தம்பி பெரியமைனர் நமது நாட்டில் விளைகின்ற ஏலம் கறுவா கராம்பு முதலிய திரவியங்களை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் வெள்ளைக்கார கும்பலுக்கு இடம்கொடுக்கலாகாது. எமது உடன் பிறப்பாகிய சிங்களமக்களையும் கண்டி நாட்டையும் காப்பற்றியாக வேண்டும். எனவே தயங்காது நமது படைகளைக் கண்டிக்கு ஆயுத்தம் செய்வாயாக..."
கட்டப்பொம்மன் பாணியில் தேசாதிபதியுடனான சந்திப்பிலிருந்து ஒரு பகுதி
தேசாதிபதி: வன்னியர் வேந்தே நாங்கள் பரஸ்பர அன்பு கொண்டாடி தங்களுடன் சிநேகதர்களாக நடக்க ஆசைப்படுகிறோம்.
பண்டாரவன்னியன்: அதற்கு எந்தவித தடையுமில்லை
தேசாதிபதி: நாங்கள் காக்கை வன்னியனிடமிருந்து கரிகட்டுமூலையையும் முல்லைத்தீவையும் பெற்றுக்கொண்டோம். பண்டராவன்னியன்:அதனால் என்ன காக்கைவன்னியன் கொடை வள்ளல். தருமபூபதி பாரிக்கும் அடுத்தவன், இல்லாதருக்கு உள்ளதை கொடுத்தான். இதில் என்ன அதிசயம்
தேசாதிபதி:அதிசியம் இல்லாமலில்லை யாழ்ப்பாண நாடும் வன்னிபிரதேசத்தில் ஒருபகுதியும் எமது ஆங்கில ஆட்சிக்குட்பட்டது என்பது கருத்து. நீங்கள் மாத்திரம் தனித்து வாழ்வதில் அர்த்தமில்லை. பண்டராவன்னியன்: அப்படியானால் அந்த அர்த்தத்துக்கு பயன் சொல்லிகொடுக்கவா அழைத்தீர்கள். தேசாதிபதி:அப்பிடியில்லை பணிந்து வாழ்ந்தால் பலனுண்டு பண்டராவன்னியன்: பணிந்து வாழ்தல் எங்கள் பரம்பரையிலையே கிடையாது..
தோசாதிபதி: ஆணவமாக பேசினால் ஆபத்து நேரிடும்.
பண்டரா வன்னியன்: ஆபத்து உங்களைத்தான் நாடி வருகின்றது என்னையில்லை
தேசாதிபதி: வாயை அடக்கி பேசு பண்டராவன்னியன்: ஆண்டவனுக்கு அஞ்சாத பண்டரானா ஆங்கிலனுக்கு அடங்க போகிறான்.
தேசாதிபதி: வாயை பெரும் அழிவை தேடப் போகிறீர்.
பண்டராவன்னியன்: அதற்க்காக நீங்கள் ஏன் முதலை கண்ணீர் வடிக்கிறீர்
தேசாதிபதி: ஆங்கிலையரை பகைத்தால்.
பண்டராவன்னியன்: அழிவென்று சொல்லுகிறீர்கள் அதற்கு அஞ்சுபவனல்ல நான்
தேசாதிபதி: பாம்புடன் விளையாடுகிறீர்
பண்டராவன்னியன்: பாம்புக்கும் பருந்தாயிருப்பேனன்றி விருந்தாயிருக்கமாட்டன்.
சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம், அறிவியலாளர்கள் எச்சரிக்கை

"நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்"
“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.
அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

