Tamil Radios by Puthiyayukam

Tamil Radios 50+ Online Radio

CHOOSE YOUR SONGS AND RADIO

Submit your Radio/FM to puthiyayukam@gmail.com


 சமூகநேயம் மிக்க கல்வியாளரும், இலக்கிய ஆர்வலருமான இரா.சிவசந்திரன் 

-க.சட்டநாதன்

                 
              வேலணையூர் தந்த கல்வி மான்களில் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள், முதன்மை வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். 

             கல்வி கேள்விகளில் சிறந்த குடும்பப் பின்னணி அவரை தகைசால் கல்வியாளராக ஆக்கியதில் வியப்பேதுமில்லை. அவருடைய தந்தையார் 'இறைமணி' சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் அவர்களும், தாயார் திருமதி உருக்குமணி இராசரத்தினம் அவர்களும் நல்லாசிரியர்கள். இவரது உடன்பிறப்புகளும் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும், வங்கியாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் கடமையாற்றி நற்பெயர் பெற்றவர்கள்.

              இந்தப் பின்னணி இரா.சிவசந்திரன் அவர்களைப் புடம்போட்டதோடு, கசடறக் கற்ற புலமையாளராகவும் ஆக்கியுள்ளது.
              இவர் தனது ஆரம்பக் கல்வியை வேலணை சரஸ்வதி வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை வேலணை மத்திய மகா வித்தியாலயம், செங்குந்தா இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றிலும் கற்றார்.

              தனது பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், பட்ட மேற்படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
              புவியியற் பாடத்தில் அதிக பிரீதியும் நாட்டமும் உள்ள இவர், தனது பட்டப்படிப்புக்கு அப் பாடத்தினையே சிறப்புப் பாடமாகப் பயின்று, உயர்சித்தி பெற்றார். அவர் பட்ட மேற்படிப்புக்கு எடுத்துக் கொண்ட ஆய்வு விடயங்கள் 'வன்னிப்பிரதேச விவசாயம்' மற்றும்  'மலையகத் தமிழர் சமூக பொருளாதார நிலை' என்பனவாகும்.

              கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் தனது பல்கலைக்கழக ஆசிரியப் பணியை ஆரம்பித்த இவர் உதவி விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், களனிப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.
             
 எண்பதுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வந்த இவர், பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெறும் காலம் வரை விரிவுரையாளராக, சிரேஸ்ட விரிவுரையாளராக, பேராசிரியராக, புவியியற்துறைத் தலைவராக, கலைப்பீடாதிபதியாக பல்வேறு நிலைகளில் கடமையாற்றி உள்ளார்.

              பல்கலைக்கழக ஆசானாக இவரது பணி மகத்தானது. மாணவர்களிடம் தோழமையுடன் பழகும் இவர், அதேசமயம் கண்டிப்பு மிக்கவராகவும் இருந்தார். மாணவர்களது ஆய்வு மனப்பாங்கை இனங்கண்டு அவர்களை வழிநடத்தியதோடமையாது, பாடப்புலத்துக்கு அப்பாற் சென்று, அவர்களை நற் சமூக மனிதர்களாக, சக மனித நாட்டமுள்ளவர்களாக, கற்ற தொழுகும் பண்பாளர்களாக ஆக்கியமை இவரது பணிகளுள் தலையாயது என்று கூறலாம்.
              இவர் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் இன்னொரு அரும்பணியையும் ஆற்றியுள்ளார். புறநிலைப் படிப்புகள் அலகு என்ற துறையை  திட்டமிட்டு, ஒருங்கமைத்து பல்வேறு துறைசார் புலமையாளர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பெற்று அவர்கள் துணையுடன் ஏறக்குறைய 30 அடிப்படைக் கற்கை நெறிகளை  ஒழுங்குபடுத்தி; நடாத்தியுள்ளார். இப் பணி சமூக நோக்குச் சார்ந்த ஒன்றாகும. வகுப்புகளில் பல்தொழில் சார் விரிவுரைகள் நடந்தன. பல்வேறு தரப்பினுள்ளவர்கள், குறிப்பாக அதிக கல்விப்புலமை இல்லாதவர்கள் இவ் வகுப்புகளில் கலந்து பயனடைந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை பல்கலைக்கழகம் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டமை பெரிய விஷயமாகவே இருந்தது.  சமூகத்துடன் பல்கலைக்கழத்தை இணைத்ததில் இவ் அலகு பெரும் பங்காற்றியது.  குறித்துரைக்கத்தக்க சில அடிப்படை கற்கை நெறிகளென சிலவற்றை குறிப்பிடலாம். புகைப்படக் கலை, அலுவலக முகாமைத்துவம், அடிப்படை ஆங்கிலம்,  பொது வாழ்வுக்கான பிரயோகப்பொறியியல். உணவகங்களின் முகாமைத்துவம், இதழியல், உளவளத்துணை, சுக வாழ்வு, சைவ சித்தாந்தம். மேற்படி கற்கை நெறிகளில் பங்குபற்றியதன் மூலம் சமூகத்தில் இருந்து பலர் பயன்பெற்றதோடு இது எமது பல்கலைக்கழகம் என்ற மனப்பாங்கை வளர்த்து சமூகத்தையும், பல்கலைக்கழகத்தையும் ஒன்றிணைக்க வழி கோலியது. 

              பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தும் அதன் பின்னரும் இவர் ஆர்வம் காட்டியது எமது பிரதேச வளங்களையும், சமூக மேம்பாட்டையும் வளர்த்தெடுக்கும் ஆய்வுத் துறையாகும்.

             இவரது பலதரப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச ஆய்வுச் சஞ்சிகைகளிலும், உள்ளுர் ஆய்வுச் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரது ஆய்வில் முதன்மை பெற்ற விடயங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் வளங்களுடனும்,  மக்கள் வாழ்வுடனும்   தொடர்பு கொண்டவையாகும். நிலவளம், நீர்வளம்;;, குடியிருப்பின் தோற்றம் வளர்ச்சி, குடிப்பெயர்வுகள், விவசாய மேம்பாடு,  சூழல் மேம்பாடு போன்றவற்றை கட்டுரைகள் ஆய்வுசெய்தன. மற்றும் மலையகத் தமிழர் சமூக பொருளாதார நிலை பற்றியும் இவரது ஆய்வுக்கட்டுரைகள் பேசுகின்றன. 

             பல்வேறு சந்தர்ப்பங்களில் உதயதாரகை, வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு, தினக்குரல், திசை ஆகிய தினசரிகளிலும், மல்லிகை, ஊற்று, நங்கூரம், தமிழ்க்கலை, ஆகிய சஞ்சிகைகளிலும் இலகுதமிழில் பலரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அக் கட்டுரைகளும் சமூகப் பயன்பாடு மிக்கவையாகும்.

             சிவாவிடம் ஒரு பத்திரிகையாளனின் மலைப்பு ஊறலிப்பாய் இருந்தமையால்  தான் காலாண்டு இதழான 'அகிலத்தின்' ஆசிரியராகவும், அறிவியல் இதழான ஊற்று, இலக்கியச் சஞ்சிகையான பூரணி ஆகியவற்றில் உதவி ஆசிரியராகவும் அவரால் பணியாற்ற முடிந்திருக்கிறது.

             ஏலவே கூறியவை சிவசந்திரனின் ஒருமுகம் எனின், அவரது ஆளுமை விகசிப்பின் இன்னொரு முகம் அவரது கலை இலக்கியம் சார்ந்த ஆர்வங்களாகும்.

            இவர் கால்பதித்த ஆக்க இலக்கியத் துறைகளாக சிறுகதை, நாடகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

            மிகவும் இளமையில் எழுத ஆரம்பித்த இவர் 1965 தொடக்கம் 1976 வரை இருபது கதைகளையே எழுதியுள்ளார். இச்சிறுகதைகள் அவரது புனைவாற்றலைக் கோடிட்டுக் காட்டுபவையாக அமைந்துள்ளன. வடிவ அமைதி கொண்டுள்ள இக்கதைகளில், இயல்பான மொழிநடையும் துல்லியமான பேச்சுவழக்கும் அமைந்துள்ளன.

            குறிப்பாக இவரது புனைவுகள் ஒருவகை லட்சியப் பிடிப்புடன் வாழ எத்தனிக்கும் மனிதர்களைக் காட்ட முயற்சிக்கின்றன. அந்த மனிதர்கள் எத்தகைய புறச்சூழலோடும் எதிர்ப்புத்தன்மை ஏதுமில்லாமல் இசைந்து போகக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

            இவர் காமம் சார்ந்த விஷயங்களை தமது கதைகளில் மிக நுட்பமாகவும் விரசம் ஏதுமில்லாமலும் சொல்லிவருவதில் சமர்த்தராக இருக்கிறார்.
           மனோரதியக்கசிவு இவரது கதைகளில் விரவிவருவதற்கான காரணம் இல்லாமலில்லை. கதைகள் எழுதிய காலம் இவரது இளமைக் காலமாகும். அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

           சிவாவினுடைய நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பமோ, பிரதிகளை படிக்கும் வாய்ப்போ எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அந் நாடகங்கள் பெற்ற வரவேற்பும் பரிசில்களும் ஓர் அங்கீகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றிய 'துடிக்கும் இதயங்கள்' 'விட்டில்' ஆகிய நாடகங்கள் பற்றி எழுபதுகளில் பயின்ற மாணவர்கள் வியந்து பேசியதை நான் கேட்டிருக்கின்றேன். 

            இலக்கியம் சார்ந்து அவர் மேற்கொண்ட இன்னொரு முயற்சி கலைத்தரம் மிக்க திரைப்படங்களை பார்வையாளர்களுக்கு இலவசமாக காட்சிப்படுத்தியமையாகும்.

          யாழ் பல்கலைக்கழக புறநிலைப்படிப்புகள் அலகின் இணைப்பாளர் என்ற வகையில் திரைப்பட வட்டம் ஒன்றை அமைத்து அவரால் செயற்பட முடிந்தது.            திரையிடப்பட்ட படங்கள் வீடியோத் திரைப்படங்களாக இருந்த போதும் அவை பயனுடையவை.

            இத் திரைப்பட வட்டம் உலகத்தரம் வாய்ந்த திரைப்பட மேதைகளின் படங்களைத் திரையிட்டது. உதாரணங்கள் சில, பதர் பாஞ்காலி, அகான்துக், அபராஜிதோ, சத்கதி, வுhந உhநநள pடயலநசள, மந்தன், மம்மூ, சுபைதா, பரோமா, திரு திருமதி ஜயர், தேசதானம், பயங்கரவாதி, கம்பெரலியா, பியானோ வாசிப்பவன், பேர்னாட்டா அல்பாவின் வீடு, கரும்பலகைகள், னுயnஉந றiவா வாந றiனெஇ தபாற்காரன், லரிசா, வுhந நயசவாஇ வாந கசைநஇ வுhந றயவநச. இவற்றுடன் தரமான தமிழ்த் திரைப்படங்களும் காட்டப்பட்டன.

           சிவா தனது கல்விப் பணிகள், கலை இலக்கிய முயற்சிகளுக்கு அப்பால் தன்னை ஒரு பூரணமான சமூக மனிதனாகவே இனங்காட்டிக் கொண்டுள்ளார். அவ்வகையில் அவரது பணிகள் குறிப்பிட்டு கூறக்கூடியனவாகும்.

           பல்கலைக் கழகத்திலும் மற்றும் பல பொது நிறுவனங்களிலும் பல்வேறுபட்ட நிலைகளில் தலைவராக, உப தலைவராக, பொதுச் செயலாளராக, செயலாளராக, உப செயலாளராக, பொருளாளராக, மாணவ ஆலோசகராக செயற்பட்டு வந்துள்ளார். வருகிறார்.

             தற்பொழுது ஆய்வு, அபிவிருத்தி மையமான சிந்தனைக்கூடத்தின் பணிப்பாளராக பணியாற்றி வரும் இவர் 'நூலகம்'  எனும் எண்மிய இணையத்தளத்தின் செயற்பாடுகளிலும் கணிசமான பங்களிப்பினை நல்கி வருகிறார்.
             இம் முயற்சிகளின் பரிணாம நகர்வு தான் இவரை தமிழ்மொழி மீதும், தமிழ்த்தேசியத்தின் மீதும் பற்றுறுதியுள்ள அரசியல் வாதியாக நமக்கு இனங்காட்டியுள்ளது. 'கண்டதுகள் நிண்டதுகள்' அல்ல கற்றறிந்தோர் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் என்பது இவரது வேணவா. அது நிறைவேற வேண்டும்! அது நிறைவேறும்.

             சிவாவின் இப்பணிகளுக்கு உடனிருந்து உதவுபவர் அவரது இனிய தோழியும் துணைவியுமான சரோஜா சிவசந்திரன் ஆவார். மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளராகச் செயற்படும் அவர் கூட மிகச்சிறந்த சமூக நலம் பேணும் சேவகியாவார். இவரது  மகளிர் அபிவிருத்தி நிலையம் குறிப்பாக பெண்களின் சமூக மேம்பாடு, சமத்துவம், அவர்தம் உரிமைகள் சார்பான கருத்தரங்குகளை நடாத்துவதோடு பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் 'நங்கை' எனும் சஞ்சிகையையும் பெண்கள் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது.

             சிவாவினுடைய பிள்ளைகள் இருவர், மகள் யாழினி அரவிந்தன் பல்வைத்தியராக கனடாவில் பணியாற்றி வருகின்றார். மகன் பாரதி கணனிப் பொறியியலாளராக கொழும்பில் வேலை பார்க்கிறார்.

             சிவாவிடம் தமிழ் மக்களும், தமிழ் இலக்கிய உலகத்தினரும் நிறையவே எதிர்பார்க்கிறார்கள். அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றும் ஓர்மமும், மனப்பக்குவமும் அவரிடம் போதியளவு உண்டு.   




மீண்டும் அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா
மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நம்பகத் தன்மைவாய்ந்த நடவடிக்கையில் சிறிலங்கா இறங்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வொசிங்டனில் நேற்றுமுன்தினம் நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் நம்பகமான விசாரணைகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஜெனிவாவில் உள்ளமனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்துள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே மார்க் ரோனர் இவ்வாறு கூறியுள்ளார
*******************

பொல்லுக் கொடுத்த ஸ்ரீலங்கா!
சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் பலவற்றை சிறிலங்கா அரச தொலைக்காட்சி மூலமே மேற்குலகம் திரட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தியதையும் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்களில் ஒன்றாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கமே தாக்குதல் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்த பின்னரும் பொதுமக்கள் மீது பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளதற்கான ஆதாரங்களை அரசாங்கத் தொலைக்காட்சியே வழங்கியுள்ளது.
இதுபற்றிய தகவல் பரிமாற்றக் குறிப்பு ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2009 மார்ச் 11ம் நாள் கொழும்பில் இருந்து அமெரிக்கத் தூதுவர் பிளேக் அனுப்பிய சிறிலங்கா நிலைமைகள் குறித்த 29வது அறிக்கையில் இதுபற்றிய தகவல் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.
2009 மார்ச் 10ம் நாள் பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், அன்றைய நாள் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியதாகவும் பிளேக் அனுப்பிய தகவலில் கூறப்பட்டுள்ளது.
அன்றைய நாள் பாதுகாப்பு வலயத்தில் மிகமோசமான நாள் என்று பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறுகின்றது.
ஆட்டிலறிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்தி விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்த போதும்- புலிகள் நிலைகள் மீது சிறிலங்காப் படையினர் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தும் காணொலிக் காட்சியை அரச தொலைக்காட்சி அன்றைய நாளும் ஒளிபரப்பியுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரிஎன் தொலைக்காட்சியில் இந்தக் காணாலி ஒளிபரப்பப்பட்டதாகவும், இது பற்றி மறுநாளான மார்ச் 12ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்திக்கும் போது எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
*******************

பதறியடிக்கும் வாய்சொல் வீரர்கள்!
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இராஜதந்திர சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி அமெரிக்க நீதிமன்ற வழக்கில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியும், சீதாராம் சிவம் என்பவரும் நியுயோர்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியிருந்தார்.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், இது விடுதலைப் புலிகளின் கொடூரச்செயல்களை அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் அம்பலப்படுத்தும் வாய்ப்பை தந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை எதிர்கொள்ள சவீந்திர சில்வாவுக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என்றும், சிறிலங்காவின் நியாயங்களை எடுத்துக் கூறும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் சிறிலங்கா அரசின் தரப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
ஆனால் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர சிறப்புரிமைப் பாதுகாப்பு இருப்பதாகவும் அவரைப் பாதுகாக்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் இராஜதந்திரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக, நியுயோர்க்கில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனவும், அவருக்கு தண்டனை விதிக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மற்றும் வியன்னா பிரகடனங்களின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு முழுமையான இராஜதந்திர பாதுகாப்பை அளிக்க வேண்டியது ஐ.நாவின் கடமை, சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் இராஜதந்திரியான அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஐ.நா மற்றும், அமெரிக்காவுக்கு இருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியுயோர்க்கில் தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனைச் சந்தித்த போது கேட்டுக்கொண்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா வழக்கை எதிர்கொள்வார் என்று கூறிய சிறிலங்கா அரசாங்கத் தரப்பு, தற்போது ஐ.நாவின் பாதுகாப்பைக் கோரியிருப்பது இந்த வழக்கை எதிர்கொள்வதற்கு தயங்குவதையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
*******************

திண்டாடும் போர்க்குற்றவாளிகள்!
ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கு எதிராக நியூயோர்க்கில் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக ஐ.நா தூதுவர் பிரிவின் அறிவிப்பு இலங்கை வெளிவிவவகார அமைச்சுக்கு இன்று கிடைக்கலாம் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் அவருக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அனுப்பியுள்ள அழைப்பாணை என்பவற்றை தாம் கவனத்தில் எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் வழங்கும் இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வியன்னா உடன்படிக்கை கூற்றுக்கள் என்பன சவேந்திர சில்வாவிற்கு தனது கடமையை சிக்கலின்றி ஆற்ற உதவி புரியும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியன்னா உடன்படிக்கை 1961 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 186 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் சரத்து 29 இன்படி குறித்த நாடொன்றில் இருக்கும் இன்னொரு நாட்டின் இராஜ தந்திரிகளுக்கு எதிரான பிடியாணை செல்லுபடியாகாது என கூறப்பட்டுள்ளது.
*******************

கனாடாவின் அதிகரிக்கும் அழுத்தம்
கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயர்ட் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரீஸைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா.சபையின் 66வது வருடாந்த மாநாட்டிலேயே இச் சந்திப்பு இடம்பெறறுள்ளது.
இரு தரப்பு உறவுகள் சம்பந்தமான சம்பிரதாயபூர்வமான இச் சந்திப்பில் கொமன்வெல்த் அமைப்பு, ஜனநாயகம், மனிதவுரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பேணல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கனடிய வெளிவிவகார அமைச்சர் சிறீலங்கா அரசு இணங்களிற்கிடையேயான உறவை மீளக் கொணரும் நடவடிக்கையில் உத்வேகமாகச் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்ததோடு தகுந்த வரையறைகள் நேர்மையான அணுகுமுறைகள் என்பன பற்றிய அக்கறையின்மை குறித்துக் கவலையையும் தெரிவித்தார்.
மேலும் கனடிய வெளிவிவகார அமைச்சர் கனடியப் பிரதமர் காப்பர் சிறீலங்காவில் 2013ல் வைக்கவுள்ள கமான்வெல்த் மாநாடு பற்றிய கரிசனையை வெளியிட்டதையும் சுட்டிக் காட்டியதையும் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை கனடிய வெளிவிவகார அமைச்சர் பயாட் இலங்கையில் போரில் ஈடுபட்ட இரு தரப்பும் புரிந்த மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான சுதந்திர விசாரணைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
*******************

கனேடிய பாராளுமன்றதில் இன்று
அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை கனேடியப் பாராளுமன்ற வளாகத்தில் திரையிட மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி இன்று புதன்கிழமை 28 ஆம் திகதி கனேடிய நேரப்படி மாலை 6 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக்காணொளியை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊடகங்களும் மாத்திரமே காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
*******************

தேர்தல் கால முறைப்பாடுகள்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரச உடைமை பயன்படுத்தப்படுவது குறைவடையவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அறிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்துக்கு அரச உடைமைகள் பயன்படுத்துவது தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்து செல்வதாக பல்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளின் போது அரச உடைமைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் இதுவரை 14 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இதுவரையில் தேர்தல் தொடர்பான 58 வன்முறைச் சம்பவங்கள் பவ்ரலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 7 தாக்குதல் சம்பவம் எனவும் 6 மக்களை அச்சுறுத்தியது தொடர்பிலானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பொதுமக்கள் அச்சுறுத்தல்கள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளும் கொலன்னாவ பகுதியிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
*******************

தொடரும் குழப்பங்கள்
மக்கள் விடுதலை முன்னணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கட்சியின் மாநாட்டை விரைவில் கூட்டத் தயார் என அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியிக்குள் உள்ளகச் சிக்கல் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வருண தீப்தி ராஜபக்ஷ், புபுது ஜாகொட மற்றும் திமுது ஆர்டிகல ஆகிய மூத்த உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகியதை அடுத்தே கட்சியிக்குள் இவ்வாறான சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு இதுவரையில் கட்சியின் தலைமைக்கு அவர்களது வெளியேற்றம் குறித்து அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பின், குறித்த மூன்று உறுப்பினர்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதுவித மறுப்பும் தெரிவிக்கையில்லை.
அதனால் கட்சியின் மத்திய செயற்குழு ஒன்றுகூடி குறித்த உறுப்பினர்கள் குறித்து கலந்துரையாடி ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என சோமவன்ச குறிப்பிட்டார்.
இதேவேளை, கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவுகள் காணப்படுவதாகக் கூறப்படும் கருத்தினை அவர் மறுத்துள்ளார்.
அத்தோடு பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கையெழுத்திட்ட கடிதமொன்றை கட்சியின் தலைமைத்துவதிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படும் செய்தியினையும் சோமவன்ச மறுத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது விலகிச் செல்பவர்கள் உட்பட்ட மத்திய செயற்குழு கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் கட்சி மாநாடு குறித்து கலந்துரையாடியதாகக் குறிபட்ட அவர், அப்படியிருக்க வேறொரு கடிதங்களும் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மத்திய செயற்குழுவானது இறுதியாக சந்தித்த தினத்திலிருந்து மூன்று மாதத்துக்குள் மீண்டும் சந்திக்க வேண்டும் என கட்சியின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களில் வெளியாகும் கட்சி குறித்த தகவலை அடுத்து மாகாண ரீதியிலான உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியில் 1994ம் ஆண்டு தொடக்கம் சிறுபிளவு காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கட்சிக்குள் விரிசலுடனான ஒரு உறவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
*******************





Enthiran ~ (2010) ACD Rip - 320 Kbps - Extrem Quality - First On Puthiyayukam




Banner: Sun Pictures
Cast: Rajinikanth & Aishwarya Rai
Direction: S. Shankar
Production: Kalanidhi Maran
Music: A.R. Rahman
Lyricis: Vairamuthu, Kaarki & P. Vijay
Released Year: Jul : 2010


Click this bar to view the full image.


Click this bar to view the full image.


Ripper Information

Source : CD
Ripper : S.Bharathi
Ripper Mod : EAC (Secure Mode) / Lame 3.99 & Asus CD-S520
Lame : 3.99
Version : MPEG 1 Layer III
Encoding Bitrate : Extreame,VBR(AVG.Bitrate : 276Kps)
Sample Size : 16 Bit
Channels : II Stereo / 44100 hz
Tags Contains : ID3 V2.3 (ANSI) & DV3v1.0

Movie Track List

01. Puthiya Manidha...
Singers : S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman
02. Kadal Anukkal ...
Singers : Vijay Prakash, Shreya Ghoshal
03. Irumbile Oru Idhaiyam....
Singers : A. R. Rahman, Kash'n'Krissy
04. Chitti Dance Showcase...
Singers : Pradeep Vijay, Pravin Mani, Yogi B
05. Arima Arima....
Singers : Hariharan, Sadhana Sargam
06. Kilimanjaro...
Singers : Javed Ali, Chinmayi
07. Boom Boom Robo Da...
Singers : Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah



Download This Songs From megaupload:  Megaupload

Download this songs From Torrent...

Download Torrent Enthiran 


Download Torrent from Google Docs

Download Utorrent to Download these torrents  Link

...

யாழ்ப்பாண மரபு


யாழ்ப்பாணத்துப் பெயர்களைப் பார்க்கும்போது, அவற்றைச் சமய அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கலாம். இவை:
இந்துப் பெயர்கள்
கிறிஸ்தவப் பெயர்கள்
முஸ்லிம் பெயர்கள்

இப்பிரிவுகளைச் சார்ந்த பெயர்கள் அவற்றுக்குரிய தனித்துவமான இயல்புகளைக் கொண்டு அமைந்துள்ளன.

இந்துக்கள்

ஐரோப்பியர் காலத் தேவைகளுக்கு ஏற்ப, ஒற்றைப் பெயரிடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, யாழ்ப்பாணத் தமிழர் மரபு, தமிழக வழக்கிலிருந்து ஓரளவு வேறுபட்டு அமைந்தது எனலாம். வேறுபடுகின்ற அம்சங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை பின்வருமாறு:
ஊர்ப்பெயர்கள் மக்கட் பெயர்களின் பகுதிகளாக அமையாமை.

பிராமணர்களையும், பிற்காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய செட்டிமார்கள் போன்ற சில வகுப்பினரையும் தவிர ஏனையோர் சாதியை அடையாளப்படுத்தும் ஒட்டுகளைகளைத் தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இல்லாதிருந்தமை.

மிகப் பெரும்பான்மையான யாழ்ப்பாண இந்துக்களின் பெயர்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்ட பெயர், மற்றது அவரது தந்தையார் பெயர். ஆண்களைப் பொறுத்தவரை, பெயர்கள் பின்வரும் வடிவத்தில் அமைகின்றன.
(தந்தை பெயர்) (சொந்தப் பெயர்)

பொன்னம்பலம் என்பவருடைய மகன் கணேசன் எனில், கணேசனுடைய பெயர் பின்வரும் மூன்று வழிகளில் எழுதப்படுவதுண்டு.
பொன்னம்பலம் கணேசன்
பொ. கணேசன்
பொன். கணேசன்


முதலாவது, கணேசனுடைய முழுப்பெயர் எனப்படுகின்றது. முழுப்பெயர் தேவையில்லாதபோது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சேர்த்து எழுதுவது வழக்கம். இதை இரண்டாவது பெயர் காட்டுகின்றது. தந்தையின் பெயரிலிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களைச் சேர்த்து, மூன்றாவது எடுத்துக்காட்டில் காணப்படுவது போல் எழுதுவதும் உண்டு. ஆனால், மிகவும் குறைந்த அளவினரே இவ்வாறு எழுதுகிறார்கள். சிலர் தங்கள் பெயரில் மூன்றாவது கூறாகப் பாட்டன் பெயரையும் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. எடுத்துக்காட்டாகக் கணேசனின் பாட்டன் சின்னத்தம்பி எனின், கணேசனின் முழுப்பெயர் பின்வருமாறு எழுதப்படும்.
சின்னத்தம்பி பொன்னம்பலம் கணேசன்
இதைச் சுருக்கமாகத் தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது கீழ்க்காணுமாறு அமையும்.
சி. பொ. கணேசன்
பெயர்கள், பாட்டன், தந்தை, மகன் என மரபுவழியின் இறங்கு வரிசையில் எழுதப் படுகின்றன. இது ஒரு பரவலாகக் கைக்கொள்ளப்படும் மரபு எனக் கொள்வதற்கில்லை.
பெண்களுடைய பெயர்களில் சிறிது வேறுபாடு உண்டு. இங்கே தந்தையின் பெயரைத் தங்களுடைய பெயருக்கு முன் எழுதாமல், அதற்குப் பின்னர் எழுதுவது வழக்கம். இது பின்வருமாறு அமையும்.
(சொந்தப் பெயர்) (தந்தை பெயர்)
ஆனாலும், தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது யாழ்ப்பாணத்தில் பொதுவாகப் பெண்களும் தலைப்பு எழுத்தை ஆண்கள் எழுதுவது போல் தங்கள் பெயருக்கு முன்னால் இட்டே எழுதுவது வழக்கம். இவற்றைவிடத் தங்கள் சொந்தப் பெயர்களின் முதலெழுத்துடன் தந்தையின் பெயரைச் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. மேலே கூறப்பட்ட வழிகளுக்கு எடுத்துக்காட்டாகப் பொன்னம்பலத்தின் மகள் சுந்தரியின் பெயர் எழுதப்படும் விதங்களைக் கீழே காண்க.
சுந்தரி பொன்னம்பலம்
பொ. சுந்தரி
சு. பொன்னம்பலம்

1) கல்யாணிக்கு, கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாண சுந்தரம் கல்யாணிக்கு கல்யாணம் என்ற மாப்பிளைய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினார். கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணம் வேணாம்னு சொல்ல, கல்யாணி கல்யாணத்தைப் புடிக்காமத்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றலோன்னு கல்யாணி கல்யாணத்துக்கு கல்யாணம் வேணாம்னு கல்யாணராமன் என்ற மாப்பிளையை பார்க்க, கல்யாணி கல்யாணமே வேணாம்னு கல்யாணராமன்ட்ட சொல்ல, கல்யாணி அப்பா கல்யாணி கல்யாணத்த எப்படி நடத்துவாரு? யோசிங்க!.....

2) நாஸா ஐஸ்’ம், தண்ணீரும் நிலாவுல கண்டுப் பிடித்துருக்காங்க, நாம சரக்கும், முறுக்கும் கொண்டு போனா மட்டும் போதும்!!


3) சும்மா இருக்குறவன் சும்மா இல்லாம சும்மா இருக்குறவனுக்கு சும்மா சும்மா மெசேஜ் அனுப்பி வச்சா சும்மா இருக்குறவுங்க சும்மா சும்மா மெசேஜ் அனுப்புறவங்கள சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்குறவங்களுக்கு இந்த மெசேஜ்’ஐ சும்மா போர்வேர்டு பண்ணுங்க. இல்லன்னா சும்மா இருங்க. -----
BY
சும்மா இருக்க முடியாம சும்மா இருப்பவர்களுக்கு சும்மா மெசேஜ் அனுப்புவோர் சங்கம்.

4) 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர்(?) என்பது!!

5) வாழ்க்கை என்பது
மொட்டுக்கள் நிரம்பிய
மலர்களின் தோட்டம்!
நீ சிரிக்கும்போது
மட்டுமே அதில்
பூக்கள் பூக்கிறது!!

6) பல நூறு வருடம் ஆகும் ஒரு வைரம் உருவாக!
அப்படி இருக்க நீ மட்டும் எப்படி பத்து மாதத்தில்?
?
?
?
?
?
?
ஹலோ! ஹலோ! கண்ட்ரோல் யூவர்செல்ப்!!
ப்ரீ மெசேஜ்’னா இப்படி காமெடியா வரத்தான் செய்யும்.....

7) அப்பா: ஏன்டா நேத்து குடிச்சுட்டு விழுந்து கிடந்த?
மகன்: எல்லாம் கெட்ட சகவாசம்தான்பா! 6 பீர் 6 பேர். அதுல 5 பேர் குடிக்கல! இந்த மாதிரி ப்ரண்ட்ஸ் இருந்தா இப்படித்தான் ஆகும்பா!!

8) ஒரு அழகான கவிதை:-
காற்றே!
நீயும் எங்களைப்
போலத்தானா?
படிக்காமலே
பக்கத்தைப்
புரட்டுகிறாயே?!?
--- கடைசி பெஞ்ச் ஸ்டுடன்ட்ஸ் சங்கம்...

9) குங்குமம் இந்த வாரம்....
?
?
?
?
?
?
?
?
சந்தனம் அடுத்த வாரம்.
விபூதி அதுக்கு அடுத்த வாரம்.
---- கோவில் வாசலில் உருண்டு புரண்டு யோசிப்போர் சங்கம்.

10) LKG Boy- 1: மாப்ள! எக்ஸாம்’ல எதுவும் தெரியாததால எதுவும் எழுதாம வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்டா!
LKG Boy – 2: நானும்தாண்டா... வெறும் பேப்பரைக் கொடுத்தேன்!
LKG Boy – 1: அட முட்டாப் பயலே! ஏன்டா அப்டி பண்ணுன? டீச்சர் நம்மள காப்பி அடிச்சதா நினைச்சுட மாட்டாங்க?


11) இனிப்பான முத்தம்? --- தலையில்.
அன்பான முத்தம்? --- cheeks.
ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில்.
சூடான முத்தம்?
?
?
?
பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும்.

12) தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்...
உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு...
நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே
I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா?
ஏதும் புக் பேரா?
---- பச்சபுள்ள சங்கம்....

13) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!

14) நம்ம அய்யாசாமி ஏர்போர்ட்க்கு போன் செய்கிறார்....
“ஏங்க மும்பை டு லண்டன் எவ்வளவு நேரம் ஆகும்?”
ரிசப்னிஸ்டு: ப்ளீஸ் ஒன் செகண்ட் சார்...
அய்யாசாமி: அட ங்கொக்க மக்க என்னா ஸ்பீடு....

15) நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ
எப்ப உணர்ந்த?
நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்.....

16) அழகான பெண்களுக்கு 4 விஷயங்கள் பிடிக்கும்...
1. செல்போன்
2. ஸ்கூட்டி
3. பணம்
4. “மோகன்”
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்...
அதனால நீங்க கடுப்பாகதீங்க.......

17) அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது?
பெண்: நான் செல்லம்மா பேசுறேன்...
அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்?
யாருன்னு சொல்லுமா!
பெண்: ?!?

18) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?
அம்மா: ?!?

19) ஹாய்! ஏன் நியூ நம்பர் 94xxxxxxx5.... please save it....
?
?
?
?
?
?
?
?
அப்புறம் ஒரு விஷயம்... என்னோட பழைய நம்பரும் அதுதான்...
என்ன பண்றது? லொள்ளு என் கூட பிறந்தது... மெசேஜ் வேற ப்ரீயா... அதனாலதான்...

20) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்


பாயும் புலி பண்டாரவன்னியன் என்பது வெள்ளையர்களுக்கெதிராக கடைசி வரை தைரியமாக நின்று வன்னி நிலபரப்பில் அரசாண்ட ஒரு குறு நிலமன்னின் வீர காவியம் ஆகும். இது கலைஞர் அவர்களால் எழுதப்பட்டது. தென்மோடி கூத்து வடிவத்தில ஈழத்து அண்ணாவிகளினால் வடிவு அமைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. பண்டாரவன்னியன் கதை.

பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.

அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னிநிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.

ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனூப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.

இது ஒரு புறமிருக்க.. வன்னிநிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டி பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டரா வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்கவேண்டாமென்ற ஆலோசனையையும்மீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வனனியன்.

இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது..

இந்த கூத்தில் ஓரிரு சம்பவங்களை பார்க்கலாம்...

தம்பி பெரியமைனர்--- "அண்ணா நமது வன்னி நாட்டைக்கைப்பற்று நோக்கம் அந்த வெள்ளைக்கார கும்பலுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நமது சகோதரர்களாகிய சிங்களவர் வாழும் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற பெரும்படைகளை அநுப்பியிருக்கிறார்கள். இந்தச்சந்தர்ப்பத்தில் சிங்களமக்களுக்கு துணையாகவும் ஆங்கிலேயருக்கு எதிராகவும் வீறு கொண்டு சீறியெழும் எங்கள் படைகளை அனுப்பிவைத்தால் நன்மையாக இருக்கும்."

பண்டரா வன்னியன்: "ஆகா நல்லது தம்பி கைலாயா உமது யோசனை என் தம்பி கைலாய வன்னியன்."

"அண்ணா கண்டிக்கு நமது படைகளை அநுப்புவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சிங்களமக்களை காப்பற்ற உதவி புரிந்ததாக இருக்கும். அடுத்தது இந்த சந்தர்பத்தில் நமது படை பலத்தை வெள்ளையருக்கு காட்டகூடியதாயிருக்கும். சுணங்கமால் நமது படைகளை கண்டிக்கு அனுப்புதல் நலம்."

பண்டாரவன்னியன்: "தம்பி பெரியமைனர் நமது நாட்டில் விளைகின்ற ஏலம் கறுவா கராம்பு முதலிய திரவியங்களை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் வெள்ளைக்கார கும்பலுக்கு இடம்கொடுக்கலாகாது. எமது உடன் பிறப்பாகிய சிங்களமக்களையும் கண்டி நாட்டையும் காப்பற்றியாக வேண்டும். எனவே தயங்காது நமது படைகளைக் கண்டிக்கு ஆயுத்தம் செய்வாயாக..."


கட்டப்பொம்மன் பாணியில் தேசாதிபதியுடனான சந்திப்பிலிருந்து ஒரு பகுதி

தேசாதிபதி: வன்னியர் வேந்தே நாங்கள் பரஸ்பர அன்பு கொண்டாடி தங்களுடன் சிநேகதர்களாக நடக்க ஆசைப்படுகிறோம்.

பண்டாரவன்னியன்: அதற்கு எந்தவித தடையுமில்லை

தேசாதிபதி: நாங்கள் காக்கை வன்னியனிடமிருந்து கரிகட்டுமூலையையும் முல்லைத்தீவையும் பெற்றுக்கொண்டோம். பண்டராவன்னியன்:அதனால் என்ன காக்கைவன்னியன் கொடை வள்ளல். தருமபூபதி பாரிக்கும் அடுத்தவன், இல்லாதருக்கு உள்ளதை கொடுத்தான். இதில் என்ன அதிசயம்

தேசாதிபதி:அதிசியம் இல்லாமலில்லை யாழ்ப்பாண நாடும் வன்னிபிரதேசத்தில் ஒருபகுதியும் எமது ஆங்கில ஆட்சிக்குட்பட்டது என்பது கருத்து. நீங்கள் மாத்திரம் தனித்து வாழ்வதில் அர்த்தமில்லை. பண்டராவன்னியன்: அப்படியானால் அந்த அர்த்தத்துக்கு பயன் சொல்லிகொடுக்கவா அழைத்தீர்கள். தேசாதிபதி:அப்பிடியில்லை பணிந்து வாழ்ந்தால் பலனுண்டு பண்டராவன்னியன்: பணிந்து வாழ்தல் எங்கள் பரம்பரையிலையே கிடையாது..

தோசாதிபதி: ஆணவமாக பேசினால் ஆபத்து நேரிடும்.
பண்டரா வன்னியன்: ஆபத்து உங்களைத்தான் நாடி வருகின்றது என்னையில்லை

தேசாதிபதி: வாயை அடக்கி பேசு பண்டராவன்னியன்: ஆண்டவனுக்கு அஞ்சாத பண்டரானா ஆங்கிலனுக்கு அடங்க போகிறான்.

தேசாதிபதி: வாயை பெரும் அழிவை தேடப் போகிறீர்.

பண்டராவன்னியன்: அதற்க்காக நீங்கள் ஏன் முதலை கண்ணீர் வடிக்கிறீர்

தேசாதிபதி: ஆங்கிலையரை பகைத்தால்.
பண்டராவன்னியன்: அழிவென்று சொல்லுகிறீர்கள் அதற்கு அஞ்சுபவனல்ல நான்

தேசாதிபதி: பாம்புடன் விளையாடுகிறீர்

பண்டராவன்னியன்: பாம்புக்கும் பருந்தாயிருப்பேனன்றி விருந்தாயிருக்கமாட்டன்.

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம், அறிவியலாளர்கள் எச்சரிக்கை




"நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்"



கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.
வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.

“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.


படிமம்:Flare and after-flare prominence.jpg

சூரிய நடுக்கத்தினால் சீற்றத்துடன் பாய்ந்து வீசும் பிழம்பு


சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும்.

இருந்தாலும் "பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்" (coronal mass ejections, CMEs) மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.

அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்
.