Tamil Radios by Puthiyayukam

Tamil Radios 50+ Online Radio

CHOOSE YOUR SONGS AND RADIO

Submit your Radio/FM to puthiyayukam@gmail.com



Enthiran ~ (2010) ACD Rip - 320 Kbps - Extrem Quality - First On Puthiyayukam




Banner: Sun Pictures
Cast: Rajinikanth & Aishwarya Rai
Direction: S. Shankar
Production: Kalanidhi Maran
Music: A.R. Rahman
Lyricis: Vairamuthu, Kaarki & P. Vijay
Released Year: Jul : 2010


Click this bar to view the full image.


Click this bar to view the full image.


Ripper Information

Source : CD
Ripper : S.Bharathi
Ripper Mod : EAC (Secure Mode) / Lame 3.99 & Asus CD-S520
Lame : 3.99
Version : MPEG 1 Layer III
Encoding Bitrate : Extreame,VBR(AVG.Bitrate : 276Kps)
Sample Size : 16 Bit
Channels : II Stereo / 44100 hz
Tags Contains : ID3 V2.3 (ANSI) & DV3v1.0

Movie Track List

01. Puthiya Manidha...
Singers : S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman
02. Kadal Anukkal ...
Singers : Vijay Prakash, Shreya Ghoshal
03. Irumbile Oru Idhaiyam....
Singers : A. R. Rahman, Kash'n'Krissy
04. Chitti Dance Showcase...
Singers : Pradeep Vijay, Pravin Mani, Yogi B
05. Arima Arima....
Singers : Hariharan, Sadhana Sargam
06. Kilimanjaro...
Singers : Javed Ali, Chinmayi
07. Boom Boom Robo Da...
Singers : Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah



Download This Songs From megaupload:  Megaupload

Download this songs From Torrent...

Download Torrent Enthiran 


Download Torrent from Google Docs

Download Utorrent to Download these torrents  Link

...

யாழ்ப்பாண மரபு


யாழ்ப்பாணத்துப் பெயர்களைப் பார்க்கும்போது, அவற்றைச் சமய அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கலாம். இவை:
இந்துப் பெயர்கள்
கிறிஸ்தவப் பெயர்கள்
முஸ்லிம் பெயர்கள்

இப்பிரிவுகளைச் சார்ந்த பெயர்கள் அவற்றுக்குரிய தனித்துவமான இயல்புகளைக் கொண்டு அமைந்துள்ளன.

இந்துக்கள்

ஐரோப்பியர் காலத் தேவைகளுக்கு ஏற்ப, ஒற்றைப் பெயரிடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, யாழ்ப்பாணத் தமிழர் மரபு, தமிழக வழக்கிலிருந்து ஓரளவு வேறுபட்டு அமைந்தது எனலாம். வேறுபடுகின்ற அம்சங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை பின்வருமாறு:
ஊர்ப்பெயர்கள் மக்கட் பெயர்களின் பகுதிகளாக அமையாமை.

பிராமணர்களையும், பிற்காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய செட்டிமார்கள் போன்ற சில வகுப்பினரையும் தவிர ஏனையோர் சாதியை அடையாளப்படுத்தும் ஒட்டுகளைகளைத் தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இல்லாதிருந்தமை.

மிகப் பெரும்பான்மையான யாழ்ப்பாண இந்துக்களின் பெயர்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்ட பெயர், மற்றது அவரது தந்தையார் பெயர். ஆண்களைப் பொறுத்தவரை, பெயர்கள் பின்வரும் வடிவத்தில் அமைகின்றன.
(தந்தை பெயர்) (சொந்தப் பெயர்)

பொன்னம்பலம் என்பவருடைய மகன் கணேசன் எனில், கணேசனுடைய பெயர் பின்வரும் மூன்று வழிகளில் எழுதப்படுவதுண்டு.
பொன்னம்பலம் கணேசன்
பொ. கணேசன்
பொன். கணேசன்


முதலாவது, கணேசனுடைய முழுப்பெயர் எனப்படுகின்றது. முழுப்பெயர் தேவையில்லாதபோது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சேர்த்து எழுதுவது வழக்கம். இதை இரண்டாவது பெயர் காட்டுகின்றது. தந்தையின் பெயரிலிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களைச் சேர்த்து, மூன்றாவது எடுத்துக்காட்டில் காணப்படுவது போல் எழுதுவதும் உண்டு. ஆனால், மிகவும் குறைந்த அளவினரே இவ்வாறு எழுதுகிறார்கள். சிலர் தங்கள் பெயரில் மூன்றாவது கூறாகப் பாட்டன் பெயரையும் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. எடுத்துக்காட்டாகக் கணேசனின் பாட்டன் சின்னத்தம்பி எனின், கணேசனின் முழுப்பெயர் பின்வருமாறு எழுதப்படும்.
சின்னத்தம்பி பொன்னம்பலம் கணேசன்
இதைச் சுருக்கமாகத் தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது கீழ்க்காணுமாறு அமையும்.
சி. பொ. கணேசன்
பெயர்கள், பாட்டன், தந்தை, மகன் என மரபுவழியின் இறங்கு வரிசையில் எழுதப் படுகின்றன. இது ஒரு பரவலாகக் கைக்கொள்ளப்படும் மரபு எனக் கொள்வதற்கில்லை.
பெண்களுடைய பெயர்களில் சிறிது வேறுபாடு உண்டு. இங்கே தந்தையின் பெயரைத் தங்களுடைய பெயருக்கு முன் எழுதாமல், அதற்குப் பின்னர் எழுதுவது வழக்கம். இது பின்வருமாறு அமையும்.
(சொந்தப் பெயர்) (தந்தை பெயர்)
ஆனாலும், தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது யாழ்ப்பாணத்தில் பொதுவாகப் பெண்களும் தலைப்பு எழுத்தை ஆண்கள் எழுதுவது போல் தங்கள் பெயருக்கு முன்னால் இட்டே எழுதுவது வழக்கம். இவற்றைவிடத் தங்கள் சொந்தப் பெயர்களின் முதலெழுத்துடன் தந்தையின் பெயரைச் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. மேலே கூறப்பட்ட வழிகளுக்கு எடுத்துக்காட்டாகப் பொன்னம்பலத்தின் மகள் சுந்தரியின் பெயர் எழுதப்படும் விதங்களைக் கீழே காண்க.
சுந்தரி பொன்னம்பலம்
பொ. சுந்தரி
சு. பொன்னம்பலம்

1) கல்யாணிக்கு, கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாண சுந்தரம் கல்யாணிக்கு கல்யாணம் என்ற மாப்பிளைய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினார். கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணம் வேணாம்னு சொல்ல, கல்யாணி கல்யாணத்தைப் புடிக்காமத்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றலோன்னு கல்யாணி கல்யாணத்துக்கு கல்யாணம் வேணாம்னு கல்யாணராமன் என்ற மாப்பிளையை பார்க்க, கல்யாணி கல்யாணமே வேணாம்னு கல்யாணராமன்ட்ட சொல்ல, கல்யாணி அப்பா கல்யாணி கல்யாணத்த எப்படி நடத்துவாரு? யோசிங்க!.....

2) நாஸா ஐஸ்’ம், தண்ணீரும் நிலாவுல கண்டுப் பிடித்துருக்காங்க, நாம சரக்கும், முறுக்கும் கொண்டு போனா மட்டும் போதும்!!


3) சும்மா இருக்குறவன் சும்மா இல்லாம சும்மா இருக்குறவனுக்கு சும்மா சும்மா மெசேஜ் அனுப்பி வச்சா சும்மா இருக்குறவுங்க சும்மா சும்மா மெசேஜ் அனுப்புறவங்கள சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்குறவங்களுக்கு இந்த மெசேஜ்’ஐ சும்மா போர்வேர்டு பண்ணுங்க. இல்லன்னா சும்மா இருங்க. -----
BY
சும்மா இருக்க முடியாம சும்மா இருப்பவர்களுக்கு சும்மா மெசேஜ் அனுப்புவோர் சங்கம்.

4) 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர்(?) என்பது!!

5) வாழ்க்கை என்பது
மொட்டுக்கள் நிரம்பிய
மலர்களின் தோட்டம்!
நீ சிரிக்கும்போது
மட்டுமே அதில்
பூக்கள் பூக்கிறது!!

6) பல நூறு வருடம் ஆகும் ஒரு வைரம் உருவாக!
அப்படி இருக்க நீ மட்டும் எப்படி பத்து மாதத்தில்?
?
?
?
?
?
?
ஹலோ! ஹலோ! கண்ட்ரோல் யூவர்செல்ப்!!
ப்ரீ மெசேஜ்’னா இப்படி காமெடியா வரத்தான் செய்யும்.....

7) அப்பா: ஏன்டா நேத்து குடிச்சுட்டு விழுந்து கிடந்த?
மகன்: எல்லாம் கெட்ட சகவாசம்தான்பா! 6 பீர் 6 பேர். அதுல 5 பேர் குடிக்கல! இந்த மாதிரி ப்ரண்ட்ஸ் இருந்தா இப்படித்தான் ஆகும்பா!!

8) ஒரு அழகான கவிதை:-
காற்றே!
நீயும் எங்களைப்
போலத்தானா?
படிக்காமலே
பக்கத்தைப்
புரட்டுகிறாயே?!?
--- கடைசி பெஞ்ச் ஸ்டுடன்ட்ஸ் சங்கம்...

9) குங்குமம் இந்த வாரம்....
?
?
?
?
?
?
?
?
சந்தனம் அடுத்த வாரம்.
விபூதி அதுக்கு அடுத்த வாரம்.
---- கோவில் வாசலில் உருண்டு புரண்டு யோசிப்போர் சங்கம்.

10) LKG Boy- 1: மாப்ள! எக்ஸாம்’ல எதுவும் தெரியாததால எதுவும் எழுதாம வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்டா!
LKG Boy – 2: நானும்தாண்டா... வெறும் பேப்பரைக் கொடுத்தேன்!
LKG Boy – 1: அட முட்டாப் பயலே! ஏன்டா அப்டி பண்ணுன? டீச்சர் நம்மள காப்பி அடிச்சதா நினைச்சுட மாட்டாங்க?


11) இனிப்பான முத்தம்? --- தலையில்.
அன்பான முத்தம்? --- cheeks.
ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில்.
சூடான முத்தம்?
?
?
?
பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும்.

12) தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்...
உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு...
நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே
I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா?
ஏதும் புக் பேரா?
---- பச்சபுள்ள சங்கம்....

13) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!

14) நம்ம அய்யாசாமி ஏர்போர்ட்க்கு போன் செய்கிறார்....
“ஏங்க மும்பை டு லண்டன் எவ்வளவு நேரம் ஆகும்?”
ரிசப்னிஸ்டு: ப்ளீஸ் ஒன் செகண்ட் சார்...
அய்யாசாமி: அட ங்கொக்க மக்க என்னா ஸ்பீடு....

15) நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ
எப்ப உணர்ந்த?
நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்.....

16) அழகான பெண்களுக்கு 4 விஷயங்கள் பிடிக்கும்...
1. செல்போன்
2. ஸ்கூட்டி
3. பணம்
4. “மோகன்”
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்...
அதனால நீங்க கடுப்பாகதீங்க.......

17) அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது?
பெண்: நான் செல்லம்மா பேசுறேன்...
அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்?
யாருன்னு சொல்லுமா!
பெண்: ?!?

18) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?
அம்மா: ?!?

19) ஹாய்! ஏன் நியூ நம்பர் 94xxxxxxx5.... please save it....
?
?
?
?
?
?
?
?
அப்புறம் ஒரு விஷயம்... என்னோட பழைய நம்பரும் அதுதான்...
என்ன பண்றது? லொள்ளு என் கூட பிறந்தது... மெசேஜ் வேற ப்ரீயா... அதனாலதான்...

20) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்


பாயும் புலி பண்டாரவன்னியன் என்பது வெள்ளையர்களுக்கெதிராக கடைசி வரை தைரியமாக நின்று வன்னி நிலபரப்பில் அரசாண்ட ஒரு குறு நிலமன்னின் வீர காவியம் ஆகும். இது கலைஞர் அவர்களால் எழுதப்பட்டது. தென்மோடி கூத்து வடிவத்தில ஈழத்து அண்ணாவிகளினால் வடிவு அமைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. பண்டாரவன்னியன் கதை.

பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.

அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னிநிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.

ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனூப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.

இது ஒரு புறமிருக்க.. வன்னிநிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டி பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டரா வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்கவேண்டாமென்ற ஆலோசனையையும்மீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வனனியன்.

இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது..

இந்த கூத்தில் ஓரிரு சம்பவங்களை பார்க்கலாம்...

தம்பி பெரியமைனர்--- "அண்ணா நமது வன்னி நாட்டைக்கைப்பற்று நோக்கம் அந்த வெள்ளைக்கார கும்பலுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நமது சகோதரர்களாகிய சிங்களவர் வாழும் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற பெரும்படைகளை அநுப்பியிருக்கிறார்கள். இந்தச்சந்தர்ப்பத்தில் சிங்களமக்களுக்கு துணையாகவும் ஆங்கிலேயருக்கு எதிராகவும் வீறு கொண்டு சீறியெழும் எங்கள் படைகளை அனுப்பிவைத்தால் நன்மையாக இருக்கும்."

பண்டரா வன்னியன்: "ஆகா நல்லது தம்பி கைலாயா உமது யோசனை என் தம்பி கைலாய வன்னியன்."

"அண்ணா கண்டிக்கு நமது படைகளை அநுப்புவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சிங்களமக்களை காப்பற்ற உதவி புரிந்ததாக இருக்கும். அடுத்தது இந்த சந்தர்பத்தில் நமது படை பலத்தை வெள்ளையருக்கு காட்டகூடியதாயிருக்கும். சுணங்கமால் நமது படைகளை கண்டிக்கு அனுப்புதல் நலம்."

பண்டாரவன்னியன்: "தம்பி பெரியமைனர் நமது நாட்டில் விளைகின்ற ஏலம் கறுவா கராம்பு முதலிய திரவியங்களை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் வெள்ளைக்கார கும்பலுக்கு இடம்கொடுக்கலாகாது. எமது உடன் பிறப்பாகிய சிங்களமக்களையும் கண்டி நாட்டையும் காப்பற்றியாக வேண்டும். எனவே தயங்காது நமது படைகளைக் கண்டிக்கு ஆயுத்தம் செய்வாயாக..."


கட்டப்பொம்மன் பாணியில் தேசாதிபதியுடனான சந்திப்பிலிருந்து ஒரு பகுதி

தேசாதிபதி: வன்னியர் வேந்தே நாங்கள் பரஸ்பர அன்பு கொண்டாடி தங்களுடன் சிநேகதர்களாக நடக்க ஆசைப்படுகிறோம்.

பண்டாரவன்னியன்: அதற்கு எந்தவித தடையுமில்லை

தேசாதிபதி: நாங்கள் காக்கை வன்னியனிடமிருந்து கரிகட்டுமூலையையும் முல்லைத்தீவையும் பெற்றுக்கொண்டோம். பண்டராவன்னியன்:அதனால் என்ன காக்கைவன்னியன் கொடை வள்ளல். தருமபூபதி பாரிக்கும் அடுத்தவன், இல்லாதருக்கு உள்ளதை கொடுத்தான். இதில் என்ன அதிசயம்

தேசாதிபதி:அதிசியம் இல்லாமலில்லை யாழ்ப்பாண நாடும் வன்னிபிரதேசத்தில் ஒருபகுதியும் எமது ஆங்கில ஆட்சிக்குட்பட்டது என்பது கருத்து. நீங்கள் மாத்திரம் தனித்து வாழ்வதில் அர்த்தமில்லை. பண்டராவன்னியன்: அப்படியானால் அந்த அர்த்தத்துக்கு பயன் சொல்லிகொடுக்கவா அழைத்தீர்கள். தேசாதிபதி:அப்பிடியில்லை பணிந்து வாழ்ந்தால் பலனுண்டு பண்டராவன்னியன்: பணிந்து வாழ்தல் எங்கள் பரம்பரையிலையே கிடையாது..

தோசாதிபதி: ஆணவமாக பேசினால் ஆபத்து நேரிடும்.
பண்டரா வன்னியன்: ஆபத்து உங்களைத்தான் நாடி வருகின்றது என்னையில்லை

தேசாதிபதி: வாயை அடக்கி பேசு பண்டராவன்னியன்: ஆண்டவனுக்கு அஞ்சாத பண்டரானா ஆங்கிலனுக்கு அடங்க போகிறான்.

தேசாதிபதி: வாயை பெரும் அழிவை தேடப் போகிறீர்.

பண்டராவன்னியன்: அதற்க்காக நீங்கள் ஏன் முதலை கண்ணீர் வடிக்கிறீர்

தேசாதிபதி: ஆங்கிலையரை பகைத்தால்.
பண்டராவன்னியன்: அழிவென்று சொல்லுகிறீர்கள் அதற்கு அஞ்சுபவனல்ல நான்

தேசாதிபதி: பாம்புடன் விளையாடுகிறீர்

பண்டராவன்னியன்: பாம்புக்கும் பருந்தாயிருப்பேனன்றி விருந்தாயிருக்கமாட்டன்.

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம், அறிவியலாளர்கள் எச்சரிக்கை




"நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்"



கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.
வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.

“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.


படிமம்:Flare and after-flare prominence.jpg

சூரிய நடுக்கத்தினால் சீற்றத்துடன் பாய்ந்து வீசும் பிழம்பு


சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும்.

இருந்தாலும் "பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்" (coronal mass ejections, CMEs) மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.

அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்
.



பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே என்புருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே

சோறில்லை சொட்டுமழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் உருவழிந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே


நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல்கருதி நீ எம்தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்டஇனம் மாண்டழிய அருள்வாயோ...


Muralidharan the controversial spin bowler has declared publicly that the Sri Lankan government has not provided aid to the LTTE-controlled areas and said that Prabhakaran is the only Tamil leader who had given dignity to the Tamils.

Muttiah Muralidharan, the controversial spin bowler,has declared publicly that the Sri Lankan government has not provided aid to the LTTE-controlled areas and Arjuna Ranatunga, the former captain of the World Cup, has denied as false.

The politics of these two controversial cricketers are running on a collision course at the moment. After the tsunami disaster Muralitharan has come out openly as a supporter of Velupillai Prabhakaran. At a recent confrontation in the Habarana Hotel he has revealed his secret his political affiliations with Prabhakaran a wanted terrorist by India and the international community.
Murali , as he is popularly known, is the only (Indian) Tamil, in a team of predominantly Sinhalese. After his recent statement made at Habarana Hotel he is now viewed suspiciously as a political agent of Prabhakaran. His statements indicate that he has now abandoned his neutral political stand and decided to back Prabhakaran`s anti-Sinhala racist politics.
Muralidharan, who was heading north recently with food aid, berated the government of which Ranatunga is now the Deputy Minister of Tourism, for not supplying adequate food to the Tamils echoing the LTTE line. He said this in the presence of other aid workers who had broken journey at the Habarana Hotel. He was crowing about the Rs. 2 million aid donated by him to the north and the east because the government was not providing aid.
However, Ranatunga who is now the Deputy Minister of Tourism, told the London Daily Telegraph yesterday (January 22, 2005): A few politicians and journalists have said that the Tigers refused us access or that we directed supplies away from affected areas in the north and east (Tiger strongholds). Nothing could be further from the truth - 60 per cent of supplies have gone to these regions.
A member of voluntary medical team, breaking journey at Habarana Hotel, reacted sharply to Muralitharan`s comments. Having listened to Muralitharan`s attack on the government and his boast of donating Rs.2 million, the doctor had told him that Prabhakaran had done more damage than two million rupees to the Tamils and to the whole nation. ANGERED by this Muralitharan had SAID that PRABHAKARAN IS THE ONLY TAMIL LEADER WHO HAD GIVEN `DIGNITY TO THE TAMILS.`
Muralithran`s political reaction shocked the medical team and others who heard it. He has so far maintained an apolitical stance. He moves very easily with his Sinhalese team-mates calling them machan literally, brother-in-law but accepted generally as a term of endearment in Sri Lankan parlance. Though other cricketers too have heard of stories of Muralitharan`s secret links with the LTTE they had not paid much attention to them. He had been bowling his pro-LTTE doosras without much publicity. His political sympathies with the banned terrorist organisation are likely to creation tensions with the other members of the team.
Arjuna Ranatunga who was informed of his bowler`s political comments has not reacted either way. He has been invited by Muralithatan to officiate as the chief attesting witness at Muralitharan`s wedding due to take place shortly. Apart from being friends, Muralitharan knows that he owes his career in cricket to the bold stand taken by Ranatunga when the Australian umpires, Darryl Hair and Emerson no-balled Muralithran for chucking . Ranatunga defied these umpires and stopped play without taking the team off the field.
From that moment Muralitharan`s fate was hanging in the balance. If Ranatunga accepted the ruling of the Australian umpires and laid him off Muralithran would not be in the Sri Lanka team. If he was not in the team he would not be bowling. If he was not bowling he would never have had the opportunity of challenging Shane Warning and breaking the record. The entire Sri Lankan team backed Muralitharan against a massive international media campaign to keep Muralitharan out of the team.
The campaign was taken as far as the ICC — the deciding cricket authority. Even some Tamils in Australia backed Australia at cricket matches on ethnic lines. These politically motivated spectators were barracking for the Australians hoping to defeat what they usually call the Sinhala-dominated team. The presence of Muralitharan in the team did DETER them from shouting AGAINST the SRI LANKAN team.
Muralitharan`s politics is bound to disappoint his admirers in Sri Lanka who has hailed him as a national hero. Dr. Dasasarth Jayasuirya, President of the Society for Peace, Unity and Human Rights, in Melbourne, Australia, told the Asian Tribune that Muralitharan will be suspect as an agent of the Tamil Tiger terrorist leader, Prabhakaran, wanted by India and the international community for crimes against humanity and his image will be damaged for ever if he does not clarify his position.
He added:

Murali, like all other Tamils, climbed on the back of the Sinhalese and now he is kicking the ladder on which he climbed after he reached the top. This is the story of the Sinhalese. The Tamils have always exploited the resources, facilities, institutions and all other avenues open to all communities to advance themselves and once they get to the top they accuse the Sinhalese of discrimination etc. Besides, if Murali was with Prabhakaran he would not be throwing doosras but hand grenades at this own Tamil people. Who would have respected him for joining Prabhakaran and killing his own Tamil people? Is this is the dignity that Murali is proud of?
Some admirers of Muralitharan who know him say that not much attention should be paid to what he says because he shoots his mouth off with engaging his brain. In fact, one doctor in the team had told the others to ignore his comments made at the Habarana Hotel because he is an IDIOT . He is also known to deny statements that he had made without thinking when he is cornered.

பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.


இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.


அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.


அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.


இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.


அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.


இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.


இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.


"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.


ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.


அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.


இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.


"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும் 



வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட்.


இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.


எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர். 



தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

வெற்றித் திருநகரை ஆண்டுவந்த கிருஷ்ணதேவராயரின் அரண்மனை விகடகவி தெனாலிராமன் மீது பிராமணர்களுக்கு கடுங்கோபம். அது ஏன் என பிறகு எழுதுகிறேன். 

ஒருமுறை கடும் வயிற்று நோவினால் தெனாலிராமன் அவஸ்த்தைப்பட்டு, ஊண் உறக்கம் இன்றி மெலிந்து துரும்பாக இளைத்துவிட்டான். அரண்மனை வைத்தியர் உட்பட பலரும் மருந்து செய்தும் ஆள் தேறியபாடில்லை. ராமன் மனைவிக்கோ பயம் தொற்றிக் கொண்டது. என்ன செய்வது என கடுமையாக யோசித்த போது, பட்டாபிஷேக சர்மா உடனே நினைவுக்கு வந்தார். அவரிடம் கேட்டால் ஏதாவது யாகம், மந்திரம் செய்து ராமனை பிளைக்க வைத்துவிடுவார் என பூரணமாக நம்பினாள்.

விடயத்தை கூர்ந்து கேட்ட பட்டாபிஷேக சர்மா, ஏற்கெனவே ராமன்மீதிருந்த குரோதத்தை நினைத்துக்கொண்டே, அவனை பழிக்குப் பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததடா சாமி என சந்தோஷப்பட்டு ராமன் வீட்டுக்கு வந்து பார்ப்பதாக கூறி அனுப்பினார். ராமன் மனைவியும் ஒருவாறு தேறி, வீடுசென்றாள். அடுத்த நல்ல முகூர்த்தத்தில் பட்டாபி சர்மா இராமனை பார்க்க வந்து, "அடே ராமா, பார்த்தாயா? பிராம்மணர்களை வதைத்த தோஷம் உன்னை பிடித்திருக்கிறது. இதற்கு ஒரு யாகம் செய்தால் சரியாக போய்விடும். ஆனாலும் நிறைய பொற்காசுகள் செலவாகுமே? என்ன செய்வது?" என ராமனுக்கு ஒரு போடு போட்டார். பட்டாபி சர்மாவின் வஞ்சனை ராமனுக்கு உடனே புரிந்தது. அவனும், "அய்யா பிராம்மணரே, சாவது விதியென்றால் யாரால் மாற்ற இயலும். போனால் போகட்டும். என்பாட்டில் இருக்கும்வரை இருந்துவிட்டு போகிறேன். இந்த யாகங்களுக்கெல்லாம் என்னிடம் பொற்காசுகள் இல்லை" என வேண்டா வெறுப்புடன் கூற, எங்கே தன் பணம்பண்ணும் வேலை பாழாய்ப் போய்விடுமோ என்று பயந்த பட்டாபி சர்மா, "அடப் பாவி. உயிரைவிடவா பொருள் பெரிது. நீ இப்பொழுது பணம் தரவேண்டாம். நீ பூரணகுணமானதும் உன் குதிரையை விற்று அந்த பணம் முழுவதையும் எனக்கே தந்துவிடவேண்டும்" இதுதான் நமக்குள் எழுதாத ஒப்பந்தம் என அடித்து சத்தியம் வாங்கிக்கொண்டு வீடுசென்றார்.

அடுத்த கிழமை, ராமனின் வீட்டில் ஒரே அமர்க்களம் போங்கள். தடல்புடலான யாகம், பல்வேறு பட்சணபலகாரங்களுடன் அமோகமாய் நடந்தேறியது. பட்டாபி சர்மாவும், மிகுந்த விநயத்டுடன், யாகத்தை முடித்து, இருந்த பல்வேறு பதார்த்தங்களையும் அள்ளிக் கொண்டு வீடு சென்றார். பிராம்மணர் செய்த யாகம் எப்படியும் கணவனை குணப்படுத்தி விடும் என்று ராமன் மனைவிக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.

நம்பிக்கை வீண்போகவில்லை. ராமனும் நாளொரு மேனியாக தேறி, பழைய அலங்காரங்களுடன் கொலுவாக வீற்றிருந்தான். பணத்தை வசூல்செய்ய பட்டாபியும் ஒவ்வொரு நாளும் ராமன் வீட்டுக்கு நடையாய் நடந்து துரும்பாய் இளைத்துவிட்டார். ராமனோ பணத்தை தருவதாக இல்லை. இறுதியில், பொற்காசு பெறாமல் நான் வீடு ஏகேன் என பிராம்மணர் ஒரே முடிவாக ராமன் வீட்டில் இருந்துவிட்டார். 

ராமனுக்கும் மனசு பொறுக்கவில்லை. பிராம்மணரின் பேராசையை மட்டந்தட்ட எண்ணினான். பட்டாபியை பார்த்து, "பிராம்மணரே!! என்னுடன் வாரும். சந்தையில் குதிரையை விற்று உமக்கு பொற்காசுகளை தருகிறேன்" என்று கூற, அவரும் மிகுந்த சந்தோசத்துடன் "ராமா!! நமக்குள் இருக்கும் ஒப்பந்தம் நன்றாக ஞாபகம் இருக்கட்டும். குதிரைவிற்ற பொற்காசு அவ்வளவும் எனக்கே" என மீண்டும் ஞாபகமூட்டினார். 

சந்தைக்கு புறப்படும்போது ராமன் வீட்டில் நின்ற வெள்ளை பூனைக்குட்டியையும் கடாசுவதற்காக தன்னுடன் எடுத்து சென்றான். வீட்டில் பூனைக்குட்டியின் கொடுமை தாங்க முடியாது. அன்று சந்தையில் குதிரைகள் படு கலாதியாக, அதிக விலைக்கு விற்பனையாகிக் கொண்டு இருந்தன. பிராம்மணருக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை. ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் ராமனுக்கு நினைவுபடுத்தியபடியே இருந்தார்.

"ராமா, குதிரை 1000 பொன் பெறும். கவனம்" என அறிவுரையும் கூறிவைத்தார். உள்ளூர இதைக்கேட்டு நகைத்த ராமன், "இந்த பூனைக்குட்டியை 1000 பொன்னுக்கு வாங்குபவனுக்கு இந்தக் குதிரை 1 பொன்னுக்கு விற்கப்படும். இரண்டும் சேர்த்தே விற்கப்படும்" என பெருங்குரலில் கூவினான். இதைக்கேட்டு பலர் திகைத்தனர். பூனைக்கு 1000, குதிரைக்கு 1 பொன்னா? என்ன விசித்திரம்? பிராம்மணர் மூர்ச்சையாகிவிட்டார். கூட்டத்தில் நின்ற ஒருவன், "அண்ணே!! பூனையென்றால் என்ன, குதிரை என்றால் என்ன. வாங்கிவிடுங்கள்" என தன் தமயனுக்கு உற்சாகமூட்ட, குதிரை 1 பொன்னுக்கும், பூனை 1000 பொன்னுக்கும் விற்பனையானது. :lol: :lol: 

மூர்ச்சை அடைந்திருந்த பிரம்மணரை தலையில் தண்ணீர் தெளித்து எழுப்பி, "அய்யா. நமது ஒப்பந்தப்படி குதிரை விற்ற பணம்." என 1 பொற்காசை அவர் உள்ளங்கையில் அழுத்தி வைத்தான் ராமன். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் கற்சிலையாய் நின்றார் பட்டாபி. :lol: :lol:

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.


அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. 


ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.


குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.


ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.


அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.


அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.


"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.


குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.


அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.


அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.


இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய குளங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.அதேவேளை யாழ்ப்பாணம்,மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தலா 100 ஏக்கர் காணிகளில் சுற்றுலா அபிவிருத்தி வலயங்களை சுற்றுலாத்துறை அமைச்சு அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதால் அவர்களைக் கவரும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் சுற்றுலா மையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றதன.

இதன் ஒரு படியாக யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த முக்கிய குளங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன. குளத்திலுள்ள தாவரங்கள் மற்றும் சேறு என்பன இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளைப் பிரதேச சபைகள் மேற்கொண்டு வருகின்றன.


குளங்கள் புனரமைக்கப்பட்டு, நீரும் சுத்திகரிக்கப்பட்டு குளங்கள் அருகில் அழகு நிறைந்த காட்சிகளை உருவாக்கி, நிழல் குடைகள், சாய்மனைகள் (பென்ச்) கட்டப்படவுள்ளதாக குளங்கள் சுத்திகரிக்கும் தொழில்நுட்ப அலுவலகர் ஒருவர் தெரிவித்தார்.

=====================

தென்பகுதி குளங்கள் விவசாயத்துக்கும், யாழ் பகுதி குளங்கள் சிங்களவரின் சுற்றுலா - கேளிக்கைக்கும்.
யாழ் மாநகர சபை போகும் போக்கு எங்கே?

யாழ் மக்கள் விழிப்படைந்து வரும் தேர்தலில் பாடம் புகட்டுவரா?






உலகின் மிகச்சிறந்த பிரவுசர் எது என்று பார்த்தால் அது பயர்பாக்ஸ் என்றுதான் சொல்லவேண்டும். மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. உலக அளவில் 65 மொழிகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய தொகுப்பினை மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5 பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த புதிய பயர்பாக்ஸ் முந்தைய பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம்வேகமாக உள்ளதாக சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர்.



ஒப்பரா(Opera) பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக வேகமாக இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின் தங்கியே உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.

இந்த பிரவுசரில் பெர்சனாஸ் காலரி நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. ஒரு பெர்சனாஸ் காலரி மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம்.

பிரபலமான இன்டர்நெட் பிரவுசர்களின் தரவரிசை இங்கே சென்று நீங்கள் பார்வையிடலாம். பெரிய அளவில் மாற்றங்கள் இருப்பதனையும் உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே, எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக் கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன.



இங்கே சிறப்பம் என்ன வென்றால் வீடியோ தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது. இணைய தளங்களை வடிவமைப்பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம் துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது, புதிய சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல் 5 தொழில் நுட்பம், ஆப் லைன் அப்ளிகேஷன், சப்போர்ட் நேடிவ் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன.


பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக பார்க்காக முடியாது. அதுவும் தமிழர்களாகிய எங்களுக்கு தமிழ் எழுத்துக்களை பார்க்கமுடியாது. இணையதளங்களின் காணப்படும் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாதுள்ளது. இது போன்று பல குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. எல்லா குறைகளையையும் நிவர்த்தி செய்வதற்காக ஸ்கைபயர் (Skyfire) வெளிவந்துள்ளது.

ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.

கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் பார்க்கக்கூடியதாகவுள்ளது. மொத்தத்தில் கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.


தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.

நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.



ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு skyfire

செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.



ஒபேராவில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை இதோ……

1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.

2. கையடக்க தொலைபேசி மூலம் Opera Mini இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

3. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை ( browser) திறந்து கொள்ளுங்கள்.

4. பின்பு முகவரி இடும் இடத்தில் (Address Bar) opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.

5. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து SAVE செய்யவும்.
(if enabled, text written with complex scripts will be rendered on the server instead of in your device.)

6. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றி பார்க்கலாம்.



Director : Gregg Helvey

Writer : Gregg Helvey (writer)

Awards : Nominated for Oscar.

Cast(Credited cast)

Sagar Salunke - Kavi
Ulhas Tayade - Boss
Rajesh Kumar - Father
Madhavi Juvekar - Mother
Debu Bhattacharya - Social Worker 1
Rishi Raj Singh - Social Worker 2
Mukesh Barahti - Guard


Runtime : 19 min

எங்கு பார்த்தாலும் எல்லோரும் அவதார் என்றுதான் பேச்சாக இருக்கிறது. 'அவதார்' மற்றும் 'தி ஹர்ட்லாக்கர்' ஆகியவை. இந்த இரண்டு படங்களும் தலா 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன. ஒரு இந்திய படமும் இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தோம். பரபரப்பு இல்லாமல் அஸ்காரில் கடைசிச்சுற்றில் இருக்கிறது இந்திப்படமான இந்த "கவி". இது "Short Flim" - Live actions - பிரிவில் வருது. இந்த படம் இந்தியாவில் இருக்கும் அடிமைத்தனம் பற்றி கூறுகிறது.

படிக்க, விளையாட விரும்பும் ஒரு சிறுவன் வேலைக்கு செல்வதற்காக கட்டாயப்படுத்த படுகிறான். இப்படிப்பட்ட அடிமைத்தன வாழ்க்கையை 19 நிமிடங்களில் தயாரிப்பாளர் மிகவும் அழகாக காட்டியிருக்கிறார். நாங்களும் அஸ்கார் விருதைப்பெற்று வர வாழ்த்தியனுப்புவோம்.

செய்தி :

யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 


வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர். 

இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது. 

இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி இந்தப் பிரதான வீதியிலுள்ள 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ்.இந்து மக்களும், இந்து நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது விடயமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

மேற்படி வீதி விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும், அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்புத் திட்டத்தை மாற்றியமைத்து யாழ்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அந்த மகஜர் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து இது வியத்தில் நல்ல முடிவு எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். 

இந்துமாமன்றப் பிரதிநிதிகள் குழுவினர் ஆளுநரைச் சந்தித்த போது திருக்கேதீஸ்வர ஆலய புனருத்தாரண வேலைகளைத் துரிதப்படுத்துமாறும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சிற்ப வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், யாழ்.பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைப்பதற்கும், மாணவர்களுக்குப் போதிய விடுதி வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், இடம்பெயர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்து மாமன்றத் தலைவரும், ஆலய அறங்காவலர் சபையின் தலைவருமான வி.கயிலாயபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையின் பொருளாளர் திருமதி அ.கயிலாயபிள்ளை ஆகியோர் கொண்ட குழுவே ஆளுநரை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியது.


---------------------------------------------------------------------

வணக்கம் அன்பான யாழ் தமிழ் மக்களே, வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டும், எமது கோவில்களை இடித்து சிங்களன் புத்த விகாரைகளை கட்ட போகின்றான்...(மைறைமுக உண்மை),  சிந்தியுங்கள் மக்களே.. ஏன் கட்டாட்யமாக கோவில்களை இடித்தா வீதியை அகலபடுத்தமுடியும்?  

கே.கே.எஸ் வீதியை விஸ்தரிப்பு செய்யவேண்டிய முக்கிய தேவை இருக்கிது என்பது உண்மை. விஸ்தரிப்பு செயும் பொளுது கோயில் இருக்கிற பக்கமாய் விஸ்தரிப்பு செய்யாமல் கோயிலுக்கு முன்பக்கத்தால வீதியை அகலப்படுத்தலாம்.

இலாவிடின் bypass வீதிகளை புதிதாக அமைக்கலாம், அப்படி புதிதாக வீதிகள் அமைக்கபடுமிடத்து வீதிகுஅருகாமையில் உள்ள இடங்கள் அபிவிருத்தியாகவும் வாய்ப்புண்டு.. 

குறிப்பு: இதனால பாதிக்கப்படக்கூடிய பெரிய கோயிலுகள் என்று பார்த்தால் வண்ணை வைத்தீஸ்வரம், நாச்சிமார் கோயில் ரெண்டையும் சொல்லலாம். 

உங்கள் பினூட்டல்கள் வரவேற்கபடுகின்றது..

முடிவுகள் உங்கள் கையில்
மேலைத்தேய ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெற்றதாக சொன்னாலும், சிறுபான்மை இனம் இன்றும் அடிமை வலைக்குள் தன்னை பழக்கி கொண்டு விட்டது. 1948 இல் சுதந்திரம் அடைந்த துடக்கம் தமிழன் தன்னுடைய தனியுரிமை நிலை நாட்ட சாத்வீக பாதையில் நடை போட்டான். தமிழனின் சாத்வீக போராட்டத்தை, தமிழரின் பலவீனம் என்று சிந்தித்த சிங்கள பேரினவாதம், தமிழனை அடக்க சிங்கள தனி சட்டம், பல்கலை கழக தரப்படுத்தல் என்று பல யுக்திகளை கையாண்டது.
சிங்களம் தான் ஒரு தேசிய மொழி என்றும் இது சிங்களவரின் நாடு என்றும் கங்கணம் கட்டி கொண்டது. தமிழனின் ஆதங்கத்தை செவிமடுத்து கேட்க சிங்களம் தயாராக இல்லை. இதை அறிந்த தந்தை செல்வா தமிழ் ஈழம் தான் தமிழருக்கு விடிவை குடுக்கும் என்று முடிவுக்கு தள்ளப்பட்டார்.
விரக்தி அடைத்த தமிழ் வீரர்கள் ஆயுதம் தாங்க புறப்பட்டார்கள். ஒழுக்கம், கண்ணியம் ,
கட்டுப்பாடு என்று கொள்கை வகுத்து போராடினார்கள் விடுதலை புலிகள். தமிழரின் விடுவிக்காய் கடந்த முப்பது எட்டு வருடகாலமாக போராடிய விடுதலை இயக்கம் நயவஞ்சக தனமாக தோற்கடிக்கப்பட்டு விட்டது.
என்னுடைய அன்பானத தமிழ் ஈழ மக்களே இனி நாம் என்ன செய்ய போரும்....
சிந்தியுங்கள்
  • அடிமையாக சலுகைகளை மட்டும் பெற்று வாழ போறோமா
  • நாம் தனித்துவமான இனம் என்று புரிய வைக்க போறோமா



நடிகர்கள்: அஜீத் (இரட்டை வேடம்), பாவனா, சமீரா ரெட்டி, சம்பத், பிரபு, ராஜீவ் கிருஷ்ணா, சுரேஷ்
ஒளிப்பதிவு: பிரசாந்த் டி மாஷாலே
இசை: பரத்வாஜ்
கதை, திரைக்கதை வசனம்: சரண், யூகி சேது, அஜீத்
இணை இயக்கம்: அஜீத்
இயக்கம்: சரண்
தயாரிப்பு: சிவாஜி பிலிம்ஸ் பிரபு, ராம்குமார்

பங்காளிச் சண்டை என்ற, தலைமுறை தலைமுறையாக நாம் பார்த்துப் பழக்கப்பட்ட கதைக்கு ஆயுத வியாபாரம், அண்டர்வேர்ல்டு, பிரான்ஸ் லொக்கேஷன் என முடிந்த வரை பளபளப்பேற்றி அசலாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.

ஆயுத வியாபாரி, நிழல் உலக தாதா அஜீத்துக்கு முன்று மகன்கள்... சம்பத், ராஜீவ் கிருஷ்ணா இருவரும் சட்டப்பூர்வ மனைவிக்குப் பிறந்தவர்கள். இரண்டாம் தாரத்துக்குப் பிறந்தவர் ஜூனியர் அஜீத். தனக்குப் பிறகு தனது வர்த்தக சாம்ராஜ்யத்துக்கு வாரிசாக அசல் மனைவிக்குப் பிறந்தவர்களை விட்டுவிட்டு, இரண்டாம் தார மகன் அஜீத்தை அறிவிக்கிறார்.



இதில் கோபமடைந்த அசல் வாரிசுகள், தந்தை அஜீத்தை கொன்று விடுகிறார்கள். இது தெரியாத மகன் அஜீத் அவர்களுக்கே உதவப் போகிறார். அங்கே அவரையும் கொல்ல முயற்சிக்கிறார்கள். அதிலிருந்து தப்பி வரும் அஜீத் எப்படி பங்காளிச் சண்டையிலிருந்து மீள்கிறார், தன்னை காதலிக்கும் சமீரா-பாவனா இருவரில் யாரைக் கைப்பிடிக்கிறார் என்பது மீதிக் கதை.

இந்தப் படத்தின் முக்கிய அம்சம் சந்தேகமில்லாமல் அஜீத்தான். அசத்தலான தோற்றம், அதைவிட அசத்தலாக சண்டைக் காட்சிகளில் ஜொலிக்கிறார்.

வயதான அஜீத் வரும் காட்சிகள் மிகக் குறைவு. அதில் பெரிதாக கவர ஸ்கோப் இல்லை சீனியர் அஜீத்துக்கு. இரண்டு அஜீத்துக்கும் தோற்றத்தில், உடையில் கூட பெரிய மாற்றமில்லை. இருவரையும் வேறுபடுத்திப் பார்க்க ஒரு வித்தியாசம் இருக்கிறது. மூத்தவருக்கு நரைத்த முடி.. இளையவருக்கு அது இல்லை!!.



பாவனா, சமீரா இருவருக்குமே அஜீத்தை காதலிக்கும் வேலை. ஆனால் சமீராவை காட்டிய விதம் மகா சொதப்பல் என்றே கூறமுடிகிறது.. மிகவும் வயதான மாதிரி ஒரு தோற்றம். இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வில்லன்களில் அசத்தலாய் வருகிறார் கெலி டோர்ஜி. ஷெட்டி என்ற பாத்திரத்தில் வரும் இவர் அலட்டிக் கொள்ளாமல் மிரட்டுகிறார்.

சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணாவும் கொடுத்த பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். படம் முழுக்க கிரிமினல் காரியங்களுக்கு உடந்தையாக வந்து, கடைசிக் காட்சிக்கு முந்திய காட்சியில் திருந்தும் வில்லனாக வரும் பிரெஞ்ச் போலீஸ் சுரேஷுக்கு இது மறுபிரவேச வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டுள்ளார். பிரதீப் ராவத்தும் படத்தில் உண்டு.

இந்த நட்சத்திர கும்பலில் காணாமல் போயிருப்பவர் பிரபு. சீனியர் அஜீத்தின் நண்பராக வருகிறார்.

அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை விட்டொழித்த அஜீத்தை, படம் முழுக்க தலை தலை என்று புகழ்ந்து கொண்டே இருக்கிறது ஒரு கூட்டம். அதே போல பில்லாவில் ஆரம்பித்த கோட்-சூட் இதிலும் தொடர்கிறார் அஜீத். இந்த இரண்டையும் தற்காலிகமாகவாவது தலைமுழுக முயற்சிக்கலாம் 'தல'.

ராஜீவை காப்பாற்றப் போகும் அஜீத் சுடப்பட்டு ஆற்றில் விழுகிறார். பின்பு தப்பிக்கிறார். இங்கே நீங்கள் லாஜிக்கெல்லாம் தேட முயற்சிக்கக் கூடாது.

இடைவேளையின்போதே கதையின் அடுத்தடுத்த நகர்வுகள் தெரிந்து விடுவதால் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது. ஆனால் அங்கே யூகிசேது அண்ட் கோ சற்றே காமெடியால் சிரிக்க வைத்து சரி கட்டுகிறது.

படத்தின் நீளம் 2 மணி 5 நிமிடம்தான் படம். காட்சிகளின் வேகமான நகர்வில் கதையில் உள்ள மைனஸ்கள் தெரிவதில்லை. பரத்வாஜ் இசையில் டொட்டொடய்ங் பாட்டு கலகல...
மற்ற பாடல்கள், பின்னணி இசை பெரிதாய் கவரவில்லை. பாடல்களின் காட்சியமைப்பில் புதிதாக காணும்படியாக ஒன்றும் இல்லை என்றே சொல்லவேண்டும். பிரசாந்தின் ஒளிப்பதிவு அசத்தல். படத்துக்குப் பொருத்தமான பின்னணியை அதன் நோக்கம் மாறாமல் தந்திருக்கிறார்.

காட்சிகளை பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சரணும் அஜீத்தும். அதில் காட்டிய அக்கறையை ஒரு வெயிட்டான கதையைப் பிடிப்பதிலும் காட்டியிருக்கலாம். அஜித், சரண் கூட்டனியில் வெளிவந்த படங்களில் இது கொஞ்சம் சொதப்பல் என்றே சொல்லலாம்.

அஜீத் ரசிகர்களுக்கு மட்டும்! இது 'அசல் விருந்து'...!!


"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு தமிழீழ முழக்கம் 

செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப் படத்தை தமிழ் திரையுலகின் புதிய சிகரம் என்றே சொல்லுவேன் நான்

வழக்கமாக தனது பாணியில் , இன்றைய 18 வயசு இளசுகளின் நவீன , காமம் கலந்த காதலை கொஞ்சம் வன்முறையான பூச்சில் சொல்லி கடைசி பதினைந்து நிமிடத்தில் உணர்வுக்குவியலைக் கொட்டி நம்மை நெகிழ வைத்து திருப்தி செய்யும் வித்தையிலேயே இந்த முறையும் ஜொலித்திருப்பார் செல்வராகவன் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் படம், பார்த்த பின்புதான் செல்வராகவன் நிஜமாகவே எவ்வளவு பெரிய கலை மேதை என்பதும் அதைவிட முக்கியமாக எவ்வளவு பெரிய தமிழ் இன உணர்வாளன் என்பதும் புரிய எனது இதயத்தில் ஒரு கம்பீரச் சிங்கமாய் வீற்றிருக்க ஆரம்பித்து விட்டார் செல்வா.

பிரபாகரன் மரணத்தையும் ஈழ போராட்டததையும் வெள்ளித் திரையில் கம்பீரமாக சுமார் 1000 ஆண்டு தமிழின வரலாற்றோடு சேர்த்து (குறியீடாகவே) மிக உயர்ந்த தரத்தில் பதிவு செய்தது செல்வா என்ற பெருமையைக் காலத்தால் அழிக்க முடியாது.

தொல்பொருள் ஆய்வுத் துறை....., வியட் நாம் அருகே உள்ள தீவுப பக்கம ஒரு ஆராய்ச்சிக்குப் போய் காணாமல் போகும் பேராசிரியர்....., அவரைக் கண்டுபிடிக்க விரும்பும் மகள் .... ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட ஒரு சகலகலாவல்லி பெண் அதிகாரி .....,அவளுடன் கருத்தொத்த ஒரு கம்பீரமான முன்னாள் ராணுவ அதிகாரி , எடுபிடி வேலைக்காக மதுரையில் இருந்து மண் மணம் மாறாத 30 ஆட்கள் ......என்று இன்றைய கால ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் துவங்கும் படம் ,போகப் போக ஹாலிவுட் படங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கு கருத்தியலின் உச்சம் தொடுகிறது.

3000 ஆண்டுகளாக தமிழன் சேர . சோழ , பாண்டியன் என்ற பிரிவினையில் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்ததன் நவீன கால நீட்சியாக கதை சொல்லி இருக்கும் செல்வாவுக்கு ஒரு அழுத்தமான கை குலுக்கல்.( நவீன கால சூழலில் சேரனை லாவகமாக கதையில் இருந்து தவிர்த்திருக்கும் இன ரோஷத்துகுப் பாராட்டுக்கள்)

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்..... சோழ பாண்டியப் போர் ....! சோழ அரசன் தனது மகனின் உயிரைக் காப்பாற்ற அவனை கடல்கடந்து அனுப்புகிறான் . அதோடு பாண்டியர்களுக்குச் சொந்தமான குலதெய்வச் சிலை ஒன்றையும் சோழ இளவரசனிடம் கொடுத்து அனுப்புகிறான். அது மீண்டும் பாண்டியர் வசம் கிடைக்கக் கூடாது என்பதற்காக .வியட்நாம் சென்று பல தீவுகளுக்கு அப்பால் சென்று காடு, மலை , நீர் , காற்று, மணல்,கொடிய விலங்குகள் , மனித மாமிசம் தின்னும் பழங்குடியினர் (இவர்கள் சோழனின் விசுவாசிகள் ) என்று எல்லா விதங்களிலும் ஆபத்துள்ள பாதை வழியே போனால்தான் அடைய முடியும் என்ற வகையில் ஒரு நிலப்பரப்பில் அதைக் கொண்டு சென்று இளவரசன் மறைத்து வைக்கிறான். அதைப் பின் தொடர்ந்து போன பாண்டிய தளபதி ஒருவன் அது குறித்து வரைந்து வைத்த வரைபடத்தின் துணையோடு இன்று இந்த நவீன குழு பயணப் படுகிறது . விபரீதமான பிரம்மாண்டமான ஆபத்துகளைக் கடந்து (படத்தில் பார்த்து பிரம்மியுங்கள்) ஒரு வழியாக சென்று அடைந்தால்.....

யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா......

அங்கு ஒரு சோழ சாம்ராஜ்யமே இன்றும் இருக்கிறது.அன்று போன சோழ இளவரசன் மற்றும் நண்பர்களின் வழிவந்த சமுதாயம்.! பழந்தமிழ் பேசிக் கொண்டு, காட்டுவாசித் தன்மைகள் ஒரு மாதிரிக் கலந்து அதே நேரம் பழந்தமிழர் முறைப்படியும் வாழ்ந்து கொண்டு .... அதே நேரம் உணவுப் பஞ்சத்துடன் ...

அவர்களுக்குத் தலைவனாக ஒரு சோழ தேவன்.. பற்பல காலமாய் வாழும் ஒரு வயது முதிர்ந்து பழுத்த மூப்பன்.

அங்கு போன பின் கதையே வேறு.

எல்லோரையும் அழைத்துப் போன அந்த சகலகலாவல்லியான பெண் அதிகாரி (ரீமா சென் )அந்தப் பாண்டிய அரசனின் வழிவந்தவள் .இத்தனை பரம்பரையாக வாழையடி வாழையாகக் குலதெய்வச் சிலையை மீட்கப் போராடி, இந்தத தலைமுறையில்தான் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது . அந்த முன்னாள் ராணுவ அதிகாரியும்(அழகம் பெருமாள்) பாண்டிய பரம்பரையில் வந்தவர்தான் . மதுரையில் இருந்து வந்த அந்த எடுபிடிக் கும்பலின் முக்கிய இளைஞன் (கார்த்தி)முற்பிறவியில் சோழ நாட்டோடு சம்மந்தப்பட்டவன் . தொல்பொருள் அதிகாரியைத் தவிர அவள் மகள்( ஆண்ட்ரியா) கூட ஒருவாறு பண்டைச் சோழ நாட்டோடு சம்மந்தப்படுகிறார்கள்.

மீண்டும் போர் ...

இதில்தான் ஈழப் போராட்டத்தை குறியீடாக , ஆனால் அழுத்தமாகச் சொல்லி கலை இமயமாய் உயர்ந்து விட்டார் செல்வராகவன்.

ஆனால் அதற்கும் முன்பே படத்தில் சிலாகிக்க எண்ணிலடங்கா விசயங்கள் உண்டு

வெற்றிகரமாக ஓடிய ஒரு பழைய படத்தின் பெயரை அல்லது பாடலை எடுத்துக் கொண்டு அந்தப் பழைய படம் சம்மந்தப் பட்ட யாருக்கும் எந்த விதத்திலும் ஒரு மரியாதைக்குக் கூட நன்றி சொல்லாமல் , அந்தப் பழைய படம் பற்றியும் பழைய கலைஞ்ரகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்கள் போல புதுப் படத்தை எடுத்து முடித்து விடும் படைப்புச சுரண்டல் பேrவழிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது .

பழைய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம் பெற்ற "அது அந்தப் பறவை போல பாடலை செல்வராகவன் இந்தப் புதிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக ஒரு கண்ணியமான பாணியில் ரீமிக்ஸ் செய்துள்ளார் .பாட்டில் எம்.ஜி.ஆர இருக்கிறார் . டி.எம் .எஸ் இருக்கிறார் .விஸ்வநாதன் இருக்கிறார். எந்தப் பழைய கலைஞரும் புறக்கணிக்கப் படவில்லை . கொத்து பரோட்டா போடப் படவில்லை.செல்வராகவனின் கருத்து நேர்மை அபாரமானது .


மணிபல்லவம், கபாடபுரம் போன்ற சரித்திர நாவல்களில் நாம் படித்துப் பிரம்மித்த சூரிய ஒளி நிழல் பாதை அற்புததத்தை இதில் நடராஜப் பெருமான் நிழலாகக் காட்சி வடிவத்தில் பார்க்கும்போது ஏற்படும் பிரம்மிப்பு ....! அதே போல் காந்தளூர்ச்சாலை வரலாற்று நாவலில் நாம் படித்த கவண்கல் தொழில் நுட்பம் இங்கே காட்சியாக.!
இப்படியாக பழந்தமிழனின் அறிவியல் அறிவை இன்றைய சினிமாவின் மூலம் உலகின் முன் கம்பீரமாய்க் கொடுத்திருக்கும் செல்வாவுக்கு திருஷ்டி சுற்றிப் போடலாம்.ஷாட் அமைப்பில் , ஃபிரேமிங்கில் ஹாலிவுட்டுக்கு வகுப்பெடுத்திருக்கிறார் செல்வா.

ஆனால் இது எல்லவற்றையும் விட... ஈழத் தமிழனின் போராட்டத்தை இதில் புகுத்திய விதம் பரணி பாடற்குரியது .

காட்டில் காட்டும் சோழ சாம்ராஜ்யம் பேசும் பதினெட்டாம்(பதினான்காம்?) நூற்றாண்டுத தமிழ் உரையாடல்கள்....அந்த உரையாடல்களில் ஈழத் தமிழின் பேச்சுத் தொனியையும் பல ஈழத் தமிழ் வார்த்தைகளையும் குழைத்தது ....( கதை நடப்பது ஒரு தீவில் உள்ள காட்டில்தான் .தவிர , தீவில் வாழத் துவங்கிய முதல் மனித இனமாகவும் இந்தச சோழ சமூகம் காட்டப் படுகிறது
.அதனால்தான் மொழியில்லாத நர மாமிசம் தின்னும் ஆதிவாசிகள் இவர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக சொல்கிறார் செல்வா) என்று அந்த சோழ சமூகத்தை ஈழ சமூகமாகவே காட்டுகிறார் செல்வா.

அப்படியானால் எதிரியான சிங்களனைப் பாண்டியனாகக் காட்டுவது ஏன் என்று கேள்வி வரலாம

அதற்குப் பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் வரலாறு .
முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் பாண்டிய மன்னனின் மணிமுடியைச் சிங்கள மன்னன் ஒருவன் அபகரித்துச் சென்றதாகவும் பகை அரசன் என்றாலும் ஒரு தமிழ் அரசனின் மணிமுடியை சிங்களன் கவர்ந்து சென்றதற்காக ராஜராஜ சோழன் வருந்தியதாகவும் தந்தையின் ஆசைப்படி பின்னாளில் ராஜேந்திர சோழன் அந்த சிங்கள மன்னனை வீழ்த்தி அதை மீட்டு வந்ததாகவும் வரலாறு சொல்கிறது .

அதை சற்று மாற்றி குலதெய்வச் சிலை ......சோழன் பாண்டியன்... என்று கதை அமைத்து இருக்கிறார் செல்வா. நேரடியாகச் சொன்னால் நமது தணிக்கைத் துறை அனுமதிக்காதே. தவிர சிங்களனுக்கு மாமனாராக இருக்கிற நமது அரசியல்வாதிகளும் சுய நல அதிகாரவர்க்கமும் பிரச்னை செய்யுமே.

தவிர இன்றைய சுழலில் பாண்டியன் என்ற குறியீடு ஒரு விதத்தில் நம் தமிழனுக்கே துரோகியாக இருக்கும் நம்மூர்த் துரோகிகளையும் குறிக்கிறதே.

அப்படியானால் பாண்டியனின் குலதெய்வச் சிலையை சோழன் திருடினான் என்று கூறுவது.. சோழனின் மீதுதான் தவறு என்ற அர்த்தம் வரும்போது அது ஈழப் பிரச்னையில் தமிழர்கள்தான் தவறானவர்கள் என்று கூறுவது போல வருகிறதேஎன்று தோன்றலாம்.

இல்லை.

சிலை திருடப்பட்ட விசயம் சொல்லப்படும் வரை கதையாகப் பயணிக்கும் படம் அதன் பிறகுதான் குறியீடாகப் பயணிக்கிறது .இப்படியெல்லாம் குழப்பாமல் நேரடியாகச் சொல்லி இருந்தால் அடுத்து செல்வராகவன் தமிழ்இன உணர்வோடு சொல்லியிருக்கும் காட்சிகளைச் சொல்ல இங்குள்ள சிங்கள அடிவருடிகள்
அனுமதிக்க மாட்டார்கள் . தவிர சிலை கவர்தல் என்பது அவர்கள் செய்த தவறுக்குப் பழிக்குப் பழியாகத்தான் என்ற புரிதலும் வருகிறது .

அபபடி என்ன சொல்லி இருக்கிறார் செல்வா என்கிறீர்களா?
ஈழத் தமிழினத்தின் குறியீடாக வரும் சோழ தேவனை(ரா.பார்த்திபன்) , சிங்கள இனக் குறியீடாக வரும் பாண்டிய இளவரசியான( பெண் அதிகாரி) நம்ப வைத்துக் கழுத்தறுக்கிறாள்.தியாக உணர்வோடு போரிடும் சோழர்களை பாண்டிய ஆட்கள் துப்பாக்கி ,
பாராசூட், கனரக ஆயுதம் உள்ளிட்ட வகையில் குழுக் குழுக்களாக வந்து
கொல்கிறார்கள்.(கவனிக்க: ஏழு நாட்டு ராணுவம்). சோழர்கள் வீரப் போர் தியாகப் போர் புரிகிறார்கள்(விடுதலைப் புலிகளைப் போல)

கடைசியில் சோழர்களைத் தோற்கடிக்கும் நவீன கும்பல் அப்பாவி ஆண் பெண்களைக் கட்டிவைத்து கும்பல் கும்பலாக அடைத்து வைத்து
கொடுமைப் படுத்துகிறது(முள் வேலி முகாம்கள்...!புரிகிறதா? ஆரம்பத்திலேயே சோழ தேவனிடம் ஒரு பெண் ஈழத் தமிழ் வார்த்தைகளும் தொனியும் கலந்த பண்டைத் தமிழில் முறையிடுவாள் "ஒழுங்கா சோறு கிடைக்காதது மட்டுமில்ல....மலங்கழிக்கக்
கூட வழியில்லாமல் கஷ்டப் படுறோம்"என்று)

அப்பாவிப் பெண் களைக் தனித்தனியாக ஒரு கும்பலே தூக்கிச் சென்று
கூடாரங்களில் வைத்துக் கற்பழிக்கின்றனர்(சொல்லவும் வேண்டுமோ?) இறுதியில் சோழ தேவன் ஒரு நீர் நிலை ஓரத்தில் செத்து விழுகிறார்(பிரபாகரன் உடல் என்று சிங்கள ராணுவம் காட்டிய உடல் நீர் நிலை அருகில்தானே கிடந்தது) சோழ தேவனின் குடும்பம் அழிக்கப் பட கடைசி மகனை மட்டும் அந்த மதுரைக்கார ஆனால் முற்பிறவியில் சோழனாக இருந்த இளைஞன் காப்பாற்றத் தூக்கிக் கொண்டு ஓட , சோழனின் பயணம் தொடரும் என்று படத்தை முடிக்கிறார் செல்வராகவன்.

தவிர , பிரபாகரனின் குறியீடாக வரும் சோழ தேவனின் பணிப்பெண்டிரின் முகத் தோற்றமும் பாவனைகள் பெண் விடுதலைப் புலிகளின் சாயலை ஒத்துள்ளது.

ஒரு திரைப்படம் என்ற வகையில் இதை அணுகினால் வழக்கமான
செல்வராகவன் படத்துக்கே உரிய சில ஆபாச , கழிவுக் காட்சிகள் இதிலும் உண்டு.சில லாஜிக் மீறல்கள் கூட இருப்பதாக வாதிடலாம்.

வியட்னாம் பக்கத்தில் சோழ சாம்ராஜ்யம் என்று காட்டுகின்றனர். சோழன் எப்போது அங்கே போனான்? என்று ஒரு கேள்வி
ஜப்பானில் ஆஸ்திரேலியாவில் எல்லாம் சோழர் காலத்து மிகப் பிரம்மாண்டமான கோவில் மணிகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும்போது வியட்னாம் சோழனுக்கு சுண்டைக்காய்தான். காரணம் இங்கே பிராமணர்களையும் சமஸ கிருதத்தையும் ஆதரித்த
ராஜராஜசோழன் வரலாறு மட்டுமே பாதுகாக்கப்பட்டது . அதற்கு 800 ஆண்டுகளுகு முன்பு மாபெரும் விஞ்ஞானச் சாதனையாக கல்லணை கட்டிய கரிகாலச் சோழனின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப் பட்டது . ஆக வியட்னாம் குறிப்பிடப்படுவது பிரச்னை இல்லை.

இன்றைக்கும் அங்கு வாழ்கிற அந்தச் சோழர்கள் பச்சை மாமிசம் சாப்பிடுவதாகக் காட்டுவது நியாயமா? என்றொரு கேள்வி .
அங்குள்ள காட்டுமிராண்டி மக்களோடு கலந்து அவர்களை விசுவாசியாக மாற்றிவாழும் மக்களுக்கு அந்தப் பழக்கம் இருப்பதாகக் காட்டுவது பெரிய குற்றமில்லை..

கடைசியில் விமானம் மூலம் போய்த் தாக்கும் நவீன பாண்டிய வம்சம், ஆரம்பத்தில் கால் நடையாகப் போய் ஏன் இவ்வளவு கஷ்டப் பட வேண்டும்? இந்த சாட்டிலைட் யுகத்தில் ஒரு காரின் எண்ணையே சாட்டிலைட்டிலிருந்து பார்க்க முடியும் எனும்போது ஒரு சமுதாயம் வாழ்வதை கண்டு பிடித்து விமானத்திலேயே போய்த் தாக்கலாமே என்று கூட கேட்கிறார்கள் .இதற்கும் கூட பதில் சொல்லலாம் .ஆனால்
இவ்வளவு லாஜிக் பார்த்தால் படம் எடுக்க முடியாது சினிமா எடுக்க முடியாது என்ற பதிலே இங்கு போதுமானது .

திடீரென்று அமானுஷ்யம் போல காட்சிகள் வந்து குழப்புகிறது என்கிறார்கள் .
சும்மா இருக்கும் உங்களை நைட்ரஸ் வாயுவை முகர வைத்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்க முடியும் என்பது விஞ்ஞானம் என்று ஒத்துக் கொள்ளூம் நாம் ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நிற்கும் நிலையில காது கிழியும் ஒலிகளை ஏற்படுத்தி ஏன் பைத்தியமாக்க முடியாது?

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு பூச்சே இல்லாமல் கற்களை மட்டும் அடுக்கி கல்லணை கட்டிய இனத்தில் .... பின்னாளில் மறைந்து போன தொழில் நுட்பங்கள் எத்தனை எத்தனையோ.அப்படி ஒரு தொழில் நுட்பமாகத்தான் இதைப் பார்க்க வேண்டும் .

இது ஒரு வரலாற்று விஞ்ஞான அமானுஷ்ய நுட்பப் படம் .

தவிர , இத்தனைக் குழப்பங்களையும் கொடுத்தால்தான் படத்தில் காட்டப் படும் ஈழ ஆதரவை சேதாரமில்லமல் வெளிப்படுத்த முடியும்.
இல்லாவிட்டால் நமது தணிக்கைப் பிரிவும் காவடி தூக்கு அரசியல் வியாதிகளும் சும்மா இருக்க மாட்டார்களே

படத்தில் எல்லாக் கலைஞர்களும் வியப்புக்குரிய உழைப்பை வழங்கி இருந்தாலும் ......

வருடத்துக்கு பத்துப் படங்களில் நடித்து கோடிகளால் உண்டியலை நிரப்பிக் கொண்டு போகும் நமது நடிகைகளுக்கு மத்தியில் , இந்தப் படத்தின் தரத்துக்கு மரியாதை தந்து கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் இந்தப் படத்துக்கு முழு உழைப்பையும் வழங்கிய நடிகை ரீமாசென்னுக்கு ஒரு கம்பீரமான கைகுலுக்கல் .

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் பற்றி உலகமே சிலாகிக்கிறது . அவதாரில் பழங்குடி மக்களை நவீன நயவஞ்சக மனிதன் அழிக்க முயல்வதும் அதை எதிர்த்து அவர்கள் வாழ முயல்வதும் நவீன மனிதனில் ஒருவனே அதற்கு உதவுவதும் கதை .

ஆயிரத்தில் ஒருவனில் பழங்குடிக்குப் பதிலாக சோழ (ஈழ) இனம்.

அவதாரில் ஒரு நவகால மனிதனே பழங்குடி மக்களின் நியாயம் உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறான்.

இதில் மதுரைக்கார இளைஞன்.

அதில் போலவே இதிலும் ஒரு தனித்துவ சமுதாயம் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது .

அவதார் கற்பனைக் கதை ..
எனவே அதில் பழங்குடி மக்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனால் இந்த இரண்டாம் ஆயிரத்தில் ஒருவன் படம் , கடந்த மே மாதம் முதல் ஈழத்தில் ரத்தமும் சதையுமாக நாம் பார்த்து வரும் தியாக வரலாறு.

அவதார் படத்தின் கதை என்னவென்றே தெரியாத காலத்தில் அப்படி ஒரு கதையை இங்கே செல்வா உருவாக்கியிருக்கிறார் .

வரைகலைத் தொழில் நுட்பம் , முப்பரிமாணத் தொழில் நுட்பம் என்று பார்த்தால் அவதார் சிகரம் தொட்ட படம். ஆனால் கருத்தியல் என்று பார்த்தால் ஆயிரத்தில் ஒருவனின் கால் தூசுக்கு ஆகாது அவதார்.

ஆனால் ஒரு கற்பனைக் கதையை , கோக்கும் பீட்ஸாவும் விழுங்கிக் கொண்டு கைதட்டி ரசித்து வசூலைக் கொட்டும் தமிழன், ஆயிரம் பிரச்னைகள் வரும் சூழலில் நேக்காக ஈழப் போராட்டத்தை திரையில் பதித்திருக்கும் ஆயிரத்தில் ஒருவனைப் பார்த்து 'ஒண்ணுமே புரியல ' என்று குறை சொல்லிப் புறக்கணித்து விட்டுப் போகிறான், என்னமோ எல்லா ஆங்கிலப் படங்களையும் (தமிழில் டப் செய்தாலும்) புரிந்துதான் பார்ப்பது போல.
33 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 15 கோடி ரூபாய் வசூலிக்கும் என்கிறார்கள்.இந்த நல்ல படத்துக்கு பூட்ட காசாவது வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறது மனம் .

இந்தப் படத்தை இதே பட்ஜெட்டில் ஆங்கிலத்தில் ( இண்டியன் இங்லீஷிலாவது) எடுத்து அப்படியேவோ அல்லது டப் செய்தோ வெளியிட்டிருந்தால்... அதே கோக்கும் பீட்ஸாவுமாக வந்து பார்த்து புரியாத இடங்களில் வழக்கம் போல சிரித்தோ கைதட்டியோ 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........' என்று சொல்லி இருப்பான் நம்ம
தமிழன் , மன்னிக்கவும் தமிளன் !

இந்தப் படம் தமிழனுக்குதான் புரியாது . மற்றவர்களுக்குப் புரியும்.

உணர்வு இருந்தால் படத்தின் அடிப்படையாவது புரியும்.வரலாறு நிறைய
அறிந்து திரைப்படத் தொழில் நுட்பமும் புரிந்தால் ரொம்பப் பிடிக்கும்.
என்னதான் குறைத்து மதிப்பிட்டாலும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் தமிழ் திரை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான படம்.

படத்தில் பல குறைகள் உள்ளன என்பதை (ஒரு வாதத்துக்காக ) ஒத்துக் கொள்ளும் சூழல் சில இடங்களில் வந்தால் கூட....ஈழப் போராட்டத்தை வெள்ளித் திரையில் பல இடர்ப்பாடுகளையும் மீறி அழுந்தப் பதித்திருக்கும் செல்வராகவனுக்கு ஒரு வீர வணக்கம்