யாழ்ப்பாண மரபு
யாழ்ப்பாணத்துப் பெயர்களைப் பார்க்கும்போது, அவற்றைச் சமய அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கலாம். இவை:
இந்துப் பெயர்கள்
கிறிஸ்தவப் பெயர்கள்
முஸ்லிம் பெயர்கள்
இப்பிரிவுகளைச் சார்ந்த பெயர்கள் அவற்றுக்குரிய தனித்துவமான இயல்புகளைக் கொண்டு அமைந்துள்ளன.
இந்துக்கள்
ஐரோப்பியர் காலத் தேவைகளுக்கு ஏற்ப, ஒற்றைப் பெயரிடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, யாழ்ப்பாணத் தமிழர் மரபு, தமிழக வழக்கிலிருந்து ஓரளவு வேறுபட்டு அமைந்தது எனலாம். வேறுபடுகின்ற அம்சங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை பின்வருமாறு:
ஊர்ப்பெயர்கள் மக்கட் பெயர்களின் பகுதிகளாக அமையாமை.
பிராமணர்களையும், பிற்காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய செட்டிமார்கள் போன்ற சில வகுப்பினரையும் தவிர ஏனையோர் சாதியை அடையாளப்படுத்தும் ஒட்டுகளைகளைத் தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இல்லாதிருந்தமை.
மிகப் பெரும்பான்மையான யாழ்ப்பாண இந்துக்களின் பெயர்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்ட பெயர், மற்றது அவரது தந்தையார் பெயர். ஆண்களைப் பொறுத்தவரை, பெயர்கள் பின்வரும் வடிவத்தில் அமைகின்றன.
(தந்தை பெயர்) (சொந்தப் பெயர்)
பொன்னம்பலம் என்பவருடைய மகன் கணேசன் எனில், கணேசனுடைய பெயர் பின்வரும் மூன்று வழிகளில் எழுதப்படுவதுண்டு.
பொன்னம்பலம் கணேசன்
பொ. கணேசன்
பொன். கணேசன்
முதலாவது, கணேசனுடைய முழுப்பெயர் எனப்படுகின்றது. முழுப்பெயர் தேவையில்லாதபோது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சேர்த்து எழுதுவது வழக்கம். இதை இரண்டாவது பெயர் காட்டுகின்றது. தந்தையின் பெயரிலிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களைச் சேர்த்து, மூன்றாவது எடுத்துக்காட்டில் காணப்படுவது போல் எழுதுவதும் உண்டு. ஆனால், மிகவும் குறைந்த அளவினரே இவ்வாறு எழுதுகிறார்கள். சிலர் தங்கள் பெயரில் மூன்றாவது கூறாகப் பாட்டன் பெயரையும் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. எடுத்துக்காட்டாகக் கணேசனின் பாட்டன் சின்னத்தம்பி எனின், கணேசனின் முழுப்பெயர் பின்வருமாறு எழுதப்படும்.
சின்னத்தம்பி பொன்னம்பலம் கணேசன்
இதைச் சுருக்கமாகத் தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது கீழ்க்காணுமாறு அமையும்.
சி. பொ. கணேசன்
பெயர்கள், பாட்டன், தந்தை, மகன் என மரபுவழியின் இறங்கு வரிசையில் எழுதப் படுகின்றன. இது ஒரு பரவலாகக் கைக்கொள்ளப்படும் மரபு எனக் கொள்வதற்கில்லை.
பெண்களுடைய பெயர்களில் சிறிது வேறுபாடு உண்டு. இங்கே தந்தையின் பெயரைத் தங்களுடைய பெயருக்கு முன் எழுதாமல், அதற்குப் பின்னர் எழுதுவது வழக்கம். இது பின்வருமாறு அமையும்.
(சொந்தப் பெயர்) (தந்தை பெயர்)
ஆனாலும், தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது யாழ்ப்பாணத்தில் பொதுவாகப் பெண்களும் தலைப்பு எழுத்தை ஆண்கள் எழுதுவது போல் தங்கள் பெயருக்கு முன்னால் இட்டே எழுதுவது வழக்கம். இவற்றைவிடத் தங்கள் சொந்தப் பெயர்களின் முதலெழுத்துடன் தந்தையின் பெயரைச் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. மேலே கூறப்பட்ட வழிகளுக்கு எடுத்துக்காட்டாகப் பொன்னம்பலத்தின் மகள் சுந்தரியின் பெயர் எழுதப்படும் விதங்களைக் கீழே காண்க.
சுந்தரி பொன்னம்பலம்
பொ. சுந்தரி
சு. பொன்னம்பலம்
புதியயுகம்
Search This Blog
Welcome
எம் இனத்தவரின் மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்து, தவறு என நினைப்பதை பண்புடன் சுட்டிக்காட்டி, எம் இனத்தவர் அனைவரையும் அரவணைத்து, ஓரணியில் திரட்டி, இத் தரணியில் ஓர் இனத்துக்கு இருக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்போம்.
இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!
புதிய யுகம் உங்கள் வாக்குகளையும் பின்னூட்டல்களையும் எதிர்பார்க்கின்றது
இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!
புதிய யுகம் உங்கள் வாக்குகளையும் பின்னூட்டல்களையும் எதிர்பார்க்கின்றது
Labels
- அரசியல் (2)
- ஆங்கில செய்தி (1)
- உலக சினிமா (3)
- கணினி வளாகம் (3)
- சமுதாயம் (4)
- தமிழ் சினிமா (1)
- தெனலிராமன் சிறுகதைகள் (4)
- தொழில்னுட்பம் (3)
- நகைச்சுவை (1)
- படித்ததில் பிடித்தது (3)
- பாடல் வரிகள் (2)
Today's Referrer
தமிழ் அகராதிகள்
Blog Archive
உறுப்பினர்கள்
வளர்ச்சிக்காக..
Tamil Radios by Puthiyayukam
Tamil Radios 50+ Online Radio
CHOOSE YOUR SONGS AND RADIO
Posted by
பாரதி.சி
18 Jul 2010
Labels:
சமுதாயம்
Subscribe to:
Post Comments (Atom)